Wednesday, August 3, 2016

சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் பாகுபாடு..!

ஏன் இந்த
சிறுபான்மையினர்
பெரும்பான்மையினர் பாகுபாடு...
அனைவரும் இந்தியர் என்பதில்
பெருமைப்படும் மக்கள் உள்ள நாட்டில்...
மதம் மற்றும் சாதியின் அடிப்படையில்
சிறுபான்மையினர், பெரும்பான்மையினர்
என பிரித்துப்பார்ப்பது, பேசுவது என்ன நியாயம்...


நான் இந்திய மண்ணில் பிறந்து
பிற மதத்தை கடைப்பிடித்தால்
சிறுபான்மையினனா இல்லை
ஒதுக்கப்பட்டவனா...

அரசியல்வாதிகள், தலைவர்கள் மற்றும் மக்களின்
எண்ணத்திலிருந்து வரும் இந்த வார்த்தைகள்
இந்திய இறையாண்மைக்கு எதிரானது என
அனைவரும் உணரும் வரை
பிரிவினை ஒழியாது.. – நாமும்
சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம் என
மார்தட்டி கொள்ளமுடியாது...

இதை அனைவருக்கும் உரக்க சொல்லுவோம். சமத்துவ இந்தியாவை உருவாக்குவோம்.

No comments:

Post a Comment

Do U Like This...