Wednesday, August 3, 2016

வரிக்கு எதிராக அல்ல.. வறுமைக்கு எதிராக...!

எதை வாங்கினாலும் வரி..
எதையும் தொட்டாலும் வரி..
என் உழைப்பிலும் வரி...

பிறக்கும் முன்னரே தொடங்கும் இந்த வரி,
நான் இறந்த பிறகும் தொடர்கிறது.

வாழ்நாள் முழுவதும் வரி கட்டும் நான்,
சாகும்வரை கையேந்தி கொண்டே இருக்கிறேன்..
அரசின் உதவிகளை வேண்டி...
 நாடு என்றாவது நல்லது செய்யுமென்று..

இது யாசகம் இல்லை..
என் உரிமை..

என் வரியால் நாடு முன்னேறுது என்றால்,
எனது வாழ்க்கையும் முன்னேற வேண்டும்..

-- வறுமையில் வாடும் விவசாயி மற்றும் குடிமகன்களின் குரல்..

No comments:

Post a Comment

Do U Like This...