Monday, August 15, 2016

வேண்டும் சுதந்திரம்.. - ஜோக்கர்களுக்காக...!




சூப்பர் சிங்கர்ல நம்ம புள்ள கலந்துக்கணும்...

அதைப் பார்த்து நாம அழுவணும்...

அதை டி.வி.ல காட்டணும் - என

பவுசுக்கும், பவருக்கும் அடிமையாகி

தீயதைக் கொண்டாடி

நல்லதை மறந்து வாழ்ற

சமுதாயத்துலதானே நாம வாழ்றோம்...!



என்ன செய்ய

இப்போலாம் ஹீரோவைவிட

வில்லனைத்தானே - இந்த

சனங்களும் விரும்புகிறார்கள்..!



சசிபெருமாள்

டிராஃபிக்ராமசாமி

மதுரைநந்தினி - என

வீதியில் தனியாக போராடும் - இந்த

ஜோக்கர்கள் ரம்மியில்(மக்கள் மனதில்)

சேரவாப்போகிறார்கள்...!



நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா

என இவர்கள் அழைத்தால்

அதை ஏற்ப்போமா - இல்லை இனிமேலும்

கதவில்லா கழிவறையில் அமர்ந்துகொண்டு

சுதந்திரத்தை தேடுவோமா..????



எப்பொழுது...

முதன்மை குடிமகனும்(மக்கள் ஜனாதிபதி)

வாழவழியற்ற குடிமகனும் கைகுலுக்கி

ஒரே பந்தியில் அமர்கிறார்களோ - அன்றுதான் 
உண்மையான சுதந்திரம்...!

No comments:

Post a Comment

Do U Like This...