Sunday, August 28, 2016

சிறுவயதில் நான் - வாழ்ந்ததும்.. தவறியதும்...

சிறுவயதில் நான் குளம் மற்றும் ஆறுகளில்
தெளிந்த (அ) அசுத்த நீரா என்று பார்த்ததுமில்லை - அதில்
நீந்தாமலும், குளிக்காமலும் இருந்ததுமில்லை...!

சிறுவயதில் நான் வயல் மற்றும் வரப்புகளில்
பாம்பு மற்றும் பச்சிகளை கண்டு ஒதுங்கியதுமில்லை - அதில்
ஆடிபாடாமலும், ஓடிசாடாமலும் இருந்ததுமில்லை...!

சிறுவயதில் நான் காடுகள் மற்றும் தோட்டங்களில்
வெறும் கால்களில் நடக்க பயந்ததுமில்லை - அதில்
அலைந்துதிரியாமலும், களவாடாமலும் இருந்ததுமில்லை...!

சிறுவயதில் நான் மலை மற்றும் குன்றுகளில்
செல்போனும் செல்பிக்காக அலைந்ததுமில்லை - அதில்
மரம் மற்றும் மலையேருதலையும் விட்டதுமில்லை...!

சிறுவயதில் நான் குளம் மற்றும் குட்டைகளில்
நீச்சல் உடைகளில் குதித்ததுமில்லை - அதில்
மீன் பிடித்தலையும், சுட்டுதிண்பதையும் தவறியதுமில்லை...!

சிறுவயதில் நான் வீடு மற்றும் அயலான் முற்றங்களில்
நேரங்களையும், அசுத்தங்களையும் பார்ப்பதுமில்லை - அதில்
விளையாட்டும், வீண்பேச்சும் இல்லாமல் இருந்ததுமில்லை...!

சிறுவயதில் நான் பள்ளி மற்றும் டியூசன்களில்
பாடமும் புத்தகமும் என மூழ்கியதுமில்லை - அதில்
அரட்டைகளும், ஒழுங்கீனங்களும் குறையாதபாடுமில்லை..!

ஆனால் இன்று..
நீந்த மனதில்லை
ஆடிப்பாட நேரமில்லை
அலைந்துதிரிய விடுவதில்லை
செல்போனைவிட்டால் பொழுதுபோக்கில்லை
விளையாட, வீண்பேச ஆளில்லை
அரட்டைக்கு சட்டத்தில் இடமுமில்லை
கல்வியைதவிர கண்ணுக்கு வேறோன்றும் தெரிவதில்லை...!

இவைகள் யாவும்
இன்றும் மாறவில்லை
நாம் தான் மாறிவிட்டோம்..!
எல்லாம் உன்னை அழைக்கிறது...
நீதான் வாழாமல்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
வாழ்க்கையை தேடி..!!!
- Britto Raj, Ramanathichen puthur

Saturday, August 27, 2016

படிப்பு, உழைப்பு மற்றும் சேமிப்பில்.. சதிகோட்பாடுகள்!!!


20ம் நூற்றாண்டின் சதிகோட்பாடு...!

எவ்வளவு சம்பாதித்தாலும் மாசம் தாண்டமாட்டேங்கிறது
இப்படியே காலப்பயணம் மேற்கொண்டால்
கடைசியில் மிஞ்சிறது என்ன..!

படிப்பை விற்கும் பாடசாலைகள்
வீட்டுக்கு ஒன்றாய் வந்தாச்சு..
உழைப்பை வாங்கும் கம்பெனிக்காரன்
புதுசா நாலு திறந்தாச்சு..
சேமிப்பை பத்திரபடுத்தும் வங்கிக்காரன்
ஊருக்கு ரெண்டுன்னு முன்னேறியாச்சு...!

என் திறமை
என் உழைப்பு
என் சேமிப்புன்னு
வீட்டிலே வைத்தால்
கருப்புப்பணம்னு புடுங்கிக்கிடுறான்...!

யாருக்காக இந்த
இருபது வருட படிப்பு
நாற்பது வருட உழைப்பு
அறுபது வருட சேமிப்பு...!

கடைசியில் எனது மகனும் - இந்த
நாற்காலியில் அமர்ந்துகொண்டு
இப்படித்தானே யோசிப்பான்..!

என்ன மாற்றம் கண்டீர் - இந்த
கல்வி, உழைப்பு மற்றும் சேமிப்பால்..
முன்பு பண்ணையார்களிடம் கூலி
இன்று கார்ப்பரேட்களின் கூலி...!

இதில் ஜாதி, மதம், இனம் என்பது..
24 மணிநேர வாழ்க்கைப்போராட்டத்தில்
திணிக்கப்படும் வரி விளம்பரங்கள் தானே..!

படைப்போமா..
படிப்பு, உழைப்பு மற்றும் சேமிப்பில் சமநிலை
உடைப்போமா கோட்பாடுகளை...???

Monday, August 15, 2016

வேண்டும் சுதந்திரம்.. - ஜோக்கர்களுக்காக...!




சூப்பர் சிங்கர்ல நம்ம புள்ள கலந்துக்கணும்...

அதைப் பார்த்து நாம அழுவணும்...

அதை டி.வி.ல காட்டணும் - என

பவுசுக்கும், பவருக்கும் அடிமையாகி

தீயதைக் கொண்டாடி

நல்லதை மறந்து வாழ்ற

சமுதாயத்துலதானே நாம வாழ்றோம்...!



என்ன செய்ய

இப்போலாம் ஹீரோவைவிட

வில்லனைத்தானே - இந்த

சனங்களும் விரும்புகிறார்கள்..!



சசிபெருமாள்

டிராஃபிக்ராமசாமி

மதுரைநந்தினி - என

வீதியில் தனியாக போராடும் - இந்த

ஜோக்கர்கள் ரம்மியில்(மக்கள் மனதில்)

சேரவாப்போகிறார்கள்...!



நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா

என இவர்கள் அழைத்தால்

அதை ஏற்ப்போமா - இல்லை இனிமேலும்

கதவில்லா கழிவறையில் அமர்ந்துகொண்டு

சுதந்திரத்தை தேடுவோமா..????



எப்பொழுது...

முதன்மை குடிமகனும்(மக்கள் ஜனாதிபதி)

வாழவழியற்ற குடிமகனும் கைகுலுக்கி

ஒரே பந்தியில் அமர்கிறார்களோ - அன்றுதான் 
உண்மையான சுதந்திரம்...!

Wednesday, August 10, 2016

பறவைகளும்...! நண்பர்களும்...!



நீங்கள் இதில் யார்?
 
சிலநேரம் நண்பர்கள் பட்டாம்பூச்சி-போல
அழகாய் தோன்றி அமைதியாய் 
மறைந்துவிடுவார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் தேனீ-போல 
தேவைக்காக மட்டும் நம்மைசுற்றி 
அசைவாடிக்கொண்டே இருப்பார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் பருந்து-போல 
பெரியவன் என்ற தோரணையிலே 
வட்டமடிப்பார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் ஆந்தை-போல 
குறுகிய நண்பர்கள் வட்டத்திற்குள் அடைத்துகொண்டு 
இன்பம் காணுவார்கள்....!


சிலநேரம் நண்பர்கள் கிளியை-போல
கனிக்காக காத்திருந்து பஞ்சைப்பார்த்ததும் 
பறந்துவிடுவார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் மயில்-போல 
நேரம் வரும்போது மட்டும் 
தோகையைவிரித்து ஆடுவார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் காகங்கள்-போல 
கூப்பிடும் குரலுக்கு செவிசாய்த்து, எதுவாயினும் 
அதை பகிர்ந்து வாழ்பவர்கள்...!


சிலநேரம் நண்பர்கள் புறாவைப்-போல 
தன் துன்பங்களை அடக்கிக்கொண்டு பிறருக்கு 
சமாதான தூதுவராய் மாறுவார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் குயிலைப்-போல 
தோற்றத்தை விமர்சித்தாலும்
நடத்தையால் வசீகரிப்பார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் கொக்கு-போல 
விட்டுகொடுக்க மனமின்றி 
விடாப்பிடியாய் காத்துக்கிடப்பார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் குருவியைப்-போல 
ஆடிப்பாடுவதர்க்காகவே எந்த சூழ்நிலையிலும் 
நம்முடன் இருப்பவர்கள்...! 

அது எப்படி!!!
பறவைகளின் குணங்கள் உனக்கு தெரியும் - என
எனை திட்டாதீர்கள்... - ஏனெனில்
நான் என் நண்பர்களின் குணங்களை 
அறிந்து வைத்துள்ளேன்...!

Tuesday, August 9, 2016

சந்நியாசம் - துறவி

வீட்டுக்கு உபதேசம் செய்து வெறுத்தவர்கள்
ஊருக்கு உபதேசம் செய்ய முடிவெடுத்தால்
அதன் பெயர் = "சந்நியாசம்"

குடி குடியை‌‌க் கெடு‌க்கு‌ம்..!!!

தெரிந்துகொள்வோம்‬..!!
உலகம் முழுவதும் அணைவரால் பகிரப்பட்டு, தினமும் 100000 -ம் கோடிக்குமேல் சம்பாதிக்கும் இரு வாக்கியங்கள்..!!
.
.
.
.
.
.
1. குடி குடியை‌‌க் கெடு‌க்கு‌ம் - குடி நா‌ட்டு‌க்கு‌ம், ‌வீ‌ட்டு‌க்கு‌ம் கேடு
2. புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்

பகுத்தறிவு...!!!

எங்கு
தனிமனித துதிப்பாடல் அதிகமாகிறதோ..!
அங்கு
பகுத்தறிவிற்கு வேலையில்லாமல் போகிறது..!!

சகிப்புத்தன்மை யாருக்காக...!

இந்தியாவில் கடன் வாங்கி
வெளிநாட்டில் முதலீடு செய்து
வட்டியும் முதலுமாக
வெளிநாட்டிலே தங்கிவிடுவதுதான்..
முதலாளித்துவத்தின் நோக்கம் - கேட்டால்
இந்தியாவில் முதலீட்டிற்கு பாதுகாப்பில்லை...!!

அரசியல்வாதியாவது 5 வருடம்தான் ஆனால் ஆண்டாண்டு காலங்கள் தொழில் வர்த்தகம் என்றபெயரில் நாட்டை சுரண்டும் இந்த பாத்திரங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை..
உலகிலே அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடு, வரிக்கு வரி போட்டு மக்களிடமே கையேந்துகிறது...!!!


தேடிப்பாருங்கள், இன்னும் பல ஆயிரம் மல்லையாக்கள் ஒளிந்துகிடக்கிறார்கள், உள்நாட்டிலும். வெளிநாடுகளிலும்..!!!!!

சமத்துவமும் சங்கடங்களும்..!!!

ஒரே இந்தியா - ஆனால்
29 மாநிலமாக பிரிந்துகிடக்கிறோம்...!
ஐம்பூதங்களை பங்கிடுவதிலும் - இங்கு
ஆயிரம் எல்லைகோடு பிளவுகள்...!
எப்பொழுது கண்டோம்
சமத்துவ இந்தியாவை...!
உணர்வுகளால் இந்தியன் - ஆனால்
உரிமைகளால்...???

நாடு வளம்பெற ஆயிரம் வரிகள்
வளம் பெறுவது யார்?
வளம் பெற்றது யார்?

தலை சாய்க்க வழியில்லாவிடினும்
தலைமைக்கு வரி கட்டவேண்டும்..
யார் கேள்விகேட்ப்பார்
யாருக்கு உரிமை உண்டு..!

சட்டங்களை நாடிச்செல்ல
பணபட்டங்களை நாடவேண்டும்..
உண்ண ஒரு சட்டம்
உடுக்க ஒரு சட்டம்
படுக்க ஒரு சட்டம்..
இவைகள் யாருக்காக...!

பட்டங்கள் பதவிகள்
சொத்துக்கள் சுகங்கள்
வியர்வைகள் வலிகள்
கொலைகள் கொள்ளைகள்
எதற்காக...!

கேள்விகேட்க்க தகுதி
நிமிர்ந்து செல்ல தகுதி
பார்வையிட தகுதி
பகிர்ந்துகொள்ள தகுதி
ஏன் இந்த தலைவிதி..!

உனது நாட்டை கேட்கமுடியுமா
உனது மாநிலத்தை கேட்கமுடியுமா
உனது மாவட்டத்தை கேட்கமுடியுமா
உனது பஞ்சாயத்தை கேட்கமுடியுமா
உனது கிராமத்தை கேட்கமுடியுமா
உனது உறவினர்களை கேட்கமுடியுமா
இதில் எங்கே சுதந்திரம்...!

மொழிகள் வேண்டும்
மாதங்கள் வேண்டும்
இனம் வேண்டும்
எப்போது சமத்துவம் வேண்டும்..!

நமக்குள்ளே உருவாக்கிக்கொள்ளும் சிக்கலான
வழிமுறைகளுக்கு நாம் இடும் பெயர்தான்
ஜனநாயகம்...!

Wednesday, August 3, 2016

உறவுகளை பாதிக்கும் படைப்புகள்..!

உண்மையான ஆறுதலை
நேருக்கு நேர் சந்தித்தால் - மட்டுமே
பெற முடியும்..!!

உயிர் அற்ற மொபைல் போனால்
உங்கள் உணர்வுகளை - எப்படி
எடுத்து செல்ல முடியும்..!!!

மதிப்பீடு...!!!

எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும்
மதிப்பீடு உண்டெனில்...
காலத்துக்கும் கடமைக்கும்
பதில் உண்டு...
தேர்வு அறையில் நானும்
வெள்ளை காகிதமும்...!!!

நகைச்சுவை அவமானங்கள்..!

நகைச்சுவை என்ற பெயரில்..!

ஒருவரை சந்தோசபடுத்த,
மற்றவரை துன்பப்படுத்தி கேலிசெய்கிறோம்..!!

அடுத்தவர்களின் அவமானங்கள் மற்றும்
துன்பங்களை எடுத்து சொல்லி,
அதை மற்றொருவர் கண்டு அல்லது கேட்டு ரசிப்பதே,
இப்பொழுது நகைச்சுவை என பொருள்படுகிறது..!!!

சினிமா மோகத்தின் விளைவு..!

சினிமா மோகத்தின் விளைவு, இப்பொழுதெல்லாம் குழந்தையின் திறமைகளாக நிர்ணயிக்கப்படுபவைகள்..!

நடனம் கற்றல்
நன்கு பாடுதல்
நன்றாக பேசுதல்
நல்ல நடிப்பு திறமை


இவையெல்லாம் பொழுதுபோக்கு அம்சங்கள் என்பதை மறந்து, குழந்தைகளுக்கு திறமைகளாக ஊக்குவிக்கபடுகின்றன..

- எத்தனையோ அப்துல் கலாம்கள் நம் குழந்தைகளிடையே ஒழிந்துகிடக்கிறார்கள், என்பதை மட்டும் பெற்றோர்கள் மறந்துவிடுகிறார்கள்...!!!

கௌரவம் வெட்கக்கேடானது..!!!

சாப்பிடும் சாப்பாடு
உடுத்தும் உடை
எங்கிருந்து வருகிறது - என
எவனும் கௌரவம் பார்ப்பதில்லை..

காதலில் மற்றும் கலப்பு திருமணத்தில் தான்
கௌரவம் தலைவிரித்தாடுகிறது..

-20ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்று சொல்வதே வெட்கக்கேடானது..!!!

பெண்களை போற்றுவோம்... ஆண்களை மதிப்போம்...!

ஆண்களுக்காக மாறும் பெண்களை விட
பெண்களுக்காக மாற்றிக்கொள்ளும் ஆண்களே அதிகம்..
துன்பம் இன்பம் என எல்லா சமயங்களிலும்
ஆண் நண்பர்களை காட்டிலும்
பெண் நண்பர்களை நம்பும்
ஆண்களே அதிகம்...


அநியாயத்தை அடக்கமுடியாமலும்
அடிமைத்தனத்தை ஒழிக்க முடியாமலும்
உள்ளதை பகிரமுடியாமலும்
சுதந்திரமாய் பேசமுடியாமலும்
வாழும் மனிதர்களில் ஆண்களை விட
பெண்களே அதிகம்..

உடைகளை உடுத்தும் விதம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறுபடலாம்...
ஆணுக்கு முழுக்கால் சட்டையும்
பெண்ணுக்கு அரைக்கால் சட்டை என
நிர்ணயிப்பது யார்?

உடல் தெரியும் ஆடையானாலும்
உள்ளம் தெரியும் கோவிலானாலும்
பார்க்கும் கண்களால் தான்
வித்தியாசத்தை உணரமுடியும் - அதைப்போல்
ஆபாச ஆடைகளின் அழுக்கு
பார்க்கும் மனிதர்களின் கண்களில் மட்டுமல்ல
உடுத்தும் மனிதர்களின் மனதிலும் உள்ளது...

பெண்களை போற்றுவோம்
ஆண்களை மதிப்போம்
வன்முறையில்லா, பாகுபாடற்ற
சமஉரிமை சமுதாயத்தை உருவாக்குவோம்...

சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் பாகுபாடு..!

ஏன் இந்த
சிறுபான்மையினர்
பெரும்பான்மையினர் பாகுபாடு...
அனைவரும் இந்தியர் என்பதில்
பெருமைப்படும் மக்கள் உள்ள நாட்டில்...
மதம் மற்றும் சாதியின் அடிப்படையில்
சிறுபான்மையினர், பெரும்பான்மையினர்
என பிரித்துப்பார்ப்பது, பேசுவது என்ன நியாயம்...


நான் இந்திய மண்ணில் பிறந்து
பிற மதத்தை கடைப்பிடித்தால்
சிறுபான்மையினனா இல்லை
ஒதுக்கப்பட்டவனா...

அரசியல்வாதிகள், தலைவர்கள் மற்றும் மக்களின்
எண்ணத்திலிருந்து வரும் இந்த வார்த்தைகள்
இந்திய இறையாண்மைக்கு எதிரானது என
அனைவரும் உணரும் வரை
பிரிவினை ஒழியாது.. – நாமும்
சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம் என
மார்தட்டி கொள்ளமுடியாது...

இதை அனைவருக்கும் உரக்க சொல்லுவோம். சமத்துவ இந்தியாவை உருவாக்குவோம்.