Tuesday, February 22, 2011

School Life - பள்ளி பருவங்கள்


                                                                          
பள்ளி பருவங்கள்...!

நான் சீருடை காலத்தில்
வால் முளைத்து திரிந்தவன் தான்
நான் தாவி தாவி அலைந்தது
உன் மனதில் தான்...*


நடைபயண தூர பள்ளியில்
உடைந்த பாதையில் 

கண்கள் அலைபாய...
கால்கள் இடறலாய் சென்றேன்...*


பதிந்து போன கண்ணாடி மனதில்
வெள்ளை பூச்சில் - பருவத்தில் 

தயங்கி வெளிவரும்
மெலிதான புன்னகையோடு
இரட்டை ஜடையில் நீ - இன்றும்
வலம் வந்து கொண்டுதான் உள்ளாய்

என் மனதில்...*

பள்ளி பருவத்தில் இருந்தபோது நீ...*
பள்ளி ஆசிரியராய் இன்று நான்...*

No comments:

Post a Comment

Do U Like This...