Tuesday, February 22, 2011

College Life - கல்லூரி நாட்கள்



 கல்லூரி நாட்கள்

உனக்காக காத்து நிற்கிறேன்
உடைந்து போன பாதையில்
பதிவுகள் மெய்யாகி போகுமோ
படைப்புகளாய் மாறி போகையில்...*

ஓரப்பார்வையின் சாரலில்
விளைந்த காதலின் சுவடுகள்...
பருவம் பார்த்து வீசிய புயலாய் பாடங்கள்
காதில் வாங்காமல் தீட்டிய
வெள்ளை காகிதம் கூறிடுமோ - எனது
இருக்கையின் கதையை...*


கோடைக்கால வானில்
வீசும் தென்றலாய்...
மிக அருகினில் நீ இருந்தும்
தூரமாய் தோன்றியது...*

பார்க்காத காதுகள் உணருமா
கேட்காத கண்களை பார்த்து...- உன்
வழிபார்த்து நடக்கும் கால்கள்...*


நிலம் பார்த்து விழ மழையா நான்
தாகம் தீரா பூமி போல் தவிக்க...*

வளைந்து கொடுக்க நதியா நான்
முதுகெலும்பில்லா நீர் போல் வாழ...*

வீணற்று கிடக்க காற்றா நான்
விளைச்சலில்லா காணலாய் கலைய...*


என்னை விட்டு உன் நினைவை கேட்கிறாய்...
உள்ளம் சிதைந்தது...
கண்ணைவிட்டு பிரியா இமைகளை பிரிக்கிறhய்...
கண்கள் நனைந்தது...*

நீ தள்ளி விட்டு போன முள்ளாய்
சிதறிப்போன நாட்கள்...*

உள்ளத்தின் தேடல்
உன் பிழையான விழிகளில்...

வீணற்று தான் போகிறேன் மழையாய்
கடலில் விழுகையில்...*
 

உனைவிட்டு பிரிந்து சென்ற பாதையில்
மடியில் விழுந்து கசங்கின மயானப்பூக்கள்...
என்றும் உன் நினைவில் நண்பா...!

No comments:

Post a Comment

Do U Like This...