Tuesday, February 22, 2011

Love Leter - காதல் கடிதம்


                                                                                                
காதல் கடிதம்

விரைவில் நகரும் நாட்கள்
உனை காணத் துடிக்குதே...
உயிர் பூக்குதே - சட்டென்று
பார்த்த சூரியன் போல் உன்னால்...*


உனை நினைத்து ஒன்று
எழுதி வைத்தேன் - நீ வரும்
வழியில் தினமும் சிலையாய் நின்றேன்...
ஒரு பார்வைதானே பார்த்துச் சென்றாய் - என்
கவிதை காகிதம் நனைத்து விட்டாய்...*


சந்திப்போமா தனிமையில்
இரவில் ஒருமுறை...
பூமியே பரவசப்படும் - இரவில்
வானவில் தோன்றியதென்று...*


உனை சேரும் நாட்களை
எண்ண தொடங்கி விட்டேன்...* - இன்றும்
என் கண்கள் முட்களாய்
உனை பின் தொடர்கிறது...

காதல் கடிதத்துடன்...!

No comments:

Post a Comment

Do U Like This...