Tuesday, February 22, 2011

Lost Life - இறுதி ஊர்வலம்

                        
                                                                                
இறுதி ஊர்வலம்

இரவு நேரவெளியில்
பயணித்தபோது
கண்கள் திறந்தே இருந்தது...
சேரமான பூச்சிகள்
கண்ணாடியை தட்டிசெல்ல
விரைந்து சென்றது புகைவண்டி - எனது
கடின மனதுடன்...*


வெள்ளை சட்டை அணிந்து
மாலை அணிவித்து அமரவைத்தார்கள்...
வழிநடுவே புறக்காளை காண்பித்து - பாட்டிகதை 

சொல்லியே காதுகளை தைக்க - மறுபுறம் 
ஓர் ஆறுதலான கை தோளின் மீது...*

வீதி எங்கும் மணம் வீச
பன்னீரால் உடல் நனைத்தது...
பூப்பந்தலோடு கட்டிய தோரணம்
அமைதியான இருக்கையில்
தனியொரு இடம் - உடன்
ஆர்ப்பரிக்கும் வாத்தியங்களுடன்...*


வாசமுல்லை ஜாதிபூ மூக்கினுள் வீச
பல பூக்களை உதரவிட்டும்
சென்று கொண்டிருந்தது
வாழ்க்கை பயணம் - இல்லை
இது என் இறுதிப்பயணம்...!

No comments:

Post a Comment

Do U Like This...