Sunday, January 16, 2011

Tamil Kavithai (தமிழ் கவிதை) - கருப்பு துறவி


           கருப்பு-துறவி

காவி அணிந்த துறவி நான்
உறைவிடம் இன்றி அலைகின்றேன்
மோகப்பூக்களின் வீதியிலே
காலணியின்றி நடக்கின்றேன்...
பாதச்சுவடுகள் ஆழமாய் பதிந்தன-என்
கால்கள் நனையாத வரை...*

நாளொரு வீதியாய்
பொழுதொரு கோவிலாய்
நாட்களும் சென்றது...-என்
காவியிலும் கரைபடிய ஆரம்பித்தது...*

மாயங்கள் பல கற்றேன்
மயங்கிய மங்கையரிடத்தில்...
யாகங்கள் பல செய்தேன்
யாசகம் தேடிய இடத்தில்...*

வெண்ணிற வானத்தின் குறைகள்
வெளிச்சமாய் தரிந்தன...
இரவில் விண்மீண்களாய்...*

கருப்பு உடலில்
காவி ஆடை அணிந்தேன்...
கட்டவிழா கூந்தலில்
கரைக்க இயலா பாரத்தை சுமந்தேன்...*
கருமேக நிழலில் மறைய ஆரம்பித்தேன்...
சிந்திய மழைத்துளிகள்
விழிதுளியாய் கரைத்து செல்ல
காவி ஆடை மாறியது...
கதர் ஆடையாய் சிறையினுள்...*

No comments:

Post a Comment

Do U Like This...