Sunday, January 2, 2011

எனக்கொரு ஆசையுண்டு 
என் இயேசுவை காணவேண்டும் 
எனக்கொரு ஆவலுண்டு 
நான் அவரோடு பேசவேண்டும் 

வானகமே வையகமே 
எனது ஆசை நிறைவேறுமா 

மலையும் காடும் சோலையும் 
அலை மோதும் கடலும் தேடினேன் 
காணேன் அவரை கதறி அழுதேன்

கரம் ஒன்று என்னை தொட்டது 
கண்ணீரை மெதுவாய் துடைத்தது 
வேதம் தந்தேன் தினமும் அதிலே 
என்னைபார் என மொழிந்தது  

தினமும் வேதத்தில் காண்கிறேன் 
தேவாதி தேவனைத் துதிக்கிறேன்  
ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன் 
ஜீவதேவனை வாழ்த்துகிறேன் 
வானகமே வையகமே 
எனது ஆசை நிறைவேறிற்றே 

No comments:

Post a Comment

Do U Like This...