Saturday, January 22, 2011

Train traveling... (இரயில் பயணங்களில்)



இரயில் பயணங்களில்...

மரப்பலகை இருக்கையில்
இருகிய இரு உள்ளங்கள்...
துடிப்பின் வேகமாய்
தடக் தடக் ஓசை ஒலிக்க
நினைவுகளை கடந்து சென்றது
சன்னலோர மரங்கள்...*

நாங்கள் கடந்து வந்த பாதைகள்
பின்னோக்கி செல்ல... - அவள் 

பேசும் வார்த்தைகள் முன்னோக்கி சென்றது...*

ரயில் பயணகாட்சிகளை
வேடிக்கையாய் அவள் ரசித்தாள்...
கண்களில் சலனமில்லாமல் - நான்
அதைபார்த்து சிரித்தேன்...*

ஒவ்வொரு நிமிடத்திலும்
மோகத்தென்றல்
அவள் துப்பட்டாவை துடைத்தெடுக்க...
தாழ்பாளிட்டால்
தென்றலை மட்டுமல்ல - என்
அலைபாயும் மனதையும் சேர்த்துதான்...*


ரயிலின் தடக் தடக் ஒலியை
ரசித்தவளுக்கு பு
ரியவில்லை - எனது
இதயம் பதக் பதக் என துடித்ததை...*

 
காதலிக்க நேரமில்லை என்பதை
கடிகார முட்களில் புரிந்தேன்...
புரியாத புதிராய் இருந்தது - நான்
அந்த காலத்தை கடக்கிறேன் என்று...*

விடாமல் ஒலித்த

தடக் தடக் ஒலியில்
அவள் முகபாவனைகளை

சிதறாமல் படமெடுத்தேன்...
நகல் அனைத்தும் எனைக்காட்டின
காந்த பார்வையில் சிக்கியது நான்தானே...
பத்திரமாய் பதிவுகளை வைத்துள்ளேன்
இன்னும் இருட்டினுள்...*


பலகையில் நாம் கிறுக்கிய
கிளிஞ்சல்கள்... - நான் 

காது கேளாதவனாய்
பார்வை இல்லாதவனாய்
உன்னுடன் சென்ற ரயில் பயணத்தை
ஜடமாய் சித்த
ரிக்கின்றன... ஓவியமாய்...*


மேகத்தில் இரு வானவில்லாய்...
கூடாத இரு தடங்கள்
காதலால் இணைந்து சென்றது - ரயில்போல...*


வேகமும் துடிப்பும் இதமாய் இருந்தது
நீ என் தோள்சாய்ந்து பேசுகையில்...
அணையா விளக்காய்
காதலின் தீபத்தை ஏற்றினேன்...
பி
ரிவின் ஒவ்வொரு நிமிடத்தையும்
காலன் ரயில் ஓசையாய் கூவினான்...*


அடையும் இடம் வந்துவிட்டது - என்
அழியா நினைவுகளோடு...
இது ஒரு தொடர்கதை பாடலோடு
நிலையம் எங்களை வரவேற்றது...
எடுத்துவைக்கும் மூட்டைகளோடு
எங்களது பயணத்தின் உறவுகளை
முதுகில் கட்டிகொண்டே
கடந்து செல்ல தயாரானோம்...*

காலத்தை வென்ற - அவளின்
சிறிய புன்னகை
இரவின் பயணங்களை நிறைவுபடுத்தியது...
சில நிமிடங்கள் பதைத்துவிட்டேன்

பேசுவதை நிருத்தி விட்டேன்
கண்களை மூடிக்கொண்டேன்
தடம்புரண்டன ஞாபகங்கள்
என்னவளையும் சேர்த்து...*

 
திடீரென விழித்துகொண்டேன்
பிரிவை நினைத்து கண்கள் துளிர்த்தது

மனமோ தடக்தடக் என தவித்தது...*

வாசல் கதவில் நின்றுகொண்டு
பார்க்கலாமென - அவள்
ஓரப்பார்வையில் சொல்கையில்...
நின்று துடித்தது இதயமட்டுமல்ல
நமது ரயில் பயணமும் தான்...
பு
ரிந்தது எனக்கு
பயணங்கள்  முடிவதில்லை...*


-ஜோ. பிரிட்டோ ராஜ்

Salasalppu...



                                  சலசலப்பு


நான் தொடுகையில்
தவித்த விழிகள்...

நான் படர்கையில்
சினுங்கிய உடல்...

உன் தவிப்பினில்
துளிர்விட்ட முட்கள்...

என் சாரலில்
சிலிர்த்த இடைகள்...

உனை பருகுகையில்
பு{த்த பதிவுகள்...

நான் பிhpகையில்
இருகிய கன்னங்கள்...
அந்த குளிர்கால இரவில்
இரு உயிர்களின் கூடல்...
விழுந்தது “மழைத்துளிகள்”
விழுமியது உனைபோன்ற “தொட்டா சினுங்கி”...*

Patient with care




நீ தினமும் என்
கைபிடிப்பாய் என்றhல்
நான் வாழ்நாள் முழுவதும்
நோயாளியாய் இருக்க தயார்...*

Love with money...



கடனாய் கேட்ட காதலுக்கு
வட்டியாய் வந்தன கனவுகள்...
அசலாய் மாறிய உன் பிரிவால்
தவணையாய் துடித்தது இதயம்...
புரியவில்லை எனக்கு
கடன் அன்பை முறிக்கும்...!

Nature of love..



அவள்
எனைப்பார்த்து
வெட்கப்படும்போதெல்லாம்...
சிவந்தது அவள் முகம் மட்டுமல்ல...
என் இதயமும் தான்...*

Love Hurt...



என் இதயம் பொய் சொல்லியது
அவள் நினைவுகளை கவிதையாய்...
அவள் கண்கள் பொய் சொல்லியது
என் காதலை தினம் கனவுகளாய்...

Leaving time..



மலர் விhpப்புகள் இருந்தும் - என்
பாதரேகைகள்
அழிந்து போயின...
உனை சுமந்து செல்கையில் வலிக்கவில்லை...
உனை கடந்து செல்கையில் புhpகிறது...

Mirror life



நான் வீழ்ந்து அழும் தடயங்களில்
உன் முகம் பார்த்தேன்...
கலங்கி கொண்டே உணர்ந்தேன்...
கண்ணாடி அறியுமா... என்ன?
கண்ணீhன் வலியை...?

Friendship fever..



உறவை தேடும் நான் - உனது
நினைவில் உயிர் வாழ...*
பிhpவை தேடும் உள்ளம் - நாளும்
கண்ணீhpல் கரைந்து செல்ல...
உனை தேடும் நான் - என்
நிழலை மறந்து தேட...*

Loving friend



உனை பார்க்கும் போதெல்லாம்
ஓடி ஒளிந்தன கண்கள்...
தயங்கி தவித்தன வார்த்தைகள்...
உன் நட்புக்காக அல்ல...
எனது காதலுக்காக...*

Part of Life


          
                            பருவக் காதல்

நான் தடுமாறும் நிமிடங்கள் - உனை

மறக்க நினைக்கும் கனங்கள்...
பருவம் பார்த்து விதைத்தது
அறுவடைக்கு முற்றி நின்றது...

கதிர்விழா காலையில்...
சிதறிய சாரல்களில்...
தூங்கும் புல்லும், பு{வும்...
குலுங்கும் நெல்மணி போன்ற சலங்கை ஒலியில்...
சதையில்லா சிலை இது...
நின்று துடித்தது...
உயிர் பு{ நீ உரசிசெல்கையில்...- இப்படியே
வறண்ட நிலம்போல் வீழந்து போகிறேன்
எதுக்கும் பயனில்லாமல்...
தள்ளாடும் வயதில்...
தவித்தது விழிகள்...- என்
பருவக் காதலை மறக்க முயன்று...*

peace of crow


இரை தேடி அலையும் காகம் நான்
மேற்கு நோக்கி பறக்கிறேன்...
கிழக்கே வானம் இருளானது என்று...*

Sarithiram...



படியாத கூந்தலில்
விடியாத இரவுகள் வீழ்ந்திடுமா...
எனது கங்கை மடைதிறந்து
விழிகோடை இரவில் பாய்ந்திடுமா...
உனது கருகிய இதயத்தில்
கலங்கிய நீர்த்துளிகள் வழிந்திடுமா...
வோpல்லா சுவடுகள் வாழ்ந்திடுமா...
இல்லை வீழ்ந்திடுமா...*

Love sight...

 

மொட்டவிழா மலர்போல்
நினைவில்லாமல் உடல் கிடக்க - கனவாய்
உயிர் பிhpந்து சென்றது...
நிதானமாய்... நிழலாய்...
தொட்டு சென்றது அவள் விழிகள்...*

Love bird



உன் விழிகள் மூடியதால்
இரவெல்லாம் ரீங்காpக்கும் வண்டுகள்
தப்புதாளங்கள் போட்டுக்கொண்டே
கண்சிமிட்டுகிறது இந்த மின்வெட்டாம்பு[{ச்சி...*

Love ever


இரவோடு நிலவா நீ
பகலோடு பிhpந்து செல்ல...
பு{வோடு பனியா நீ
பார்த்ததும் உருகி செல்ல...
மழைமுன் வானவில்லா நீ
காற்றேhடு மேகமாய் கரைந்து செல்ல...
கனவோடு காதலா நீ
எனை மண்ணோடு மறைத்து செல்ல...*

Feel with college life


நிமிட நேர உறவுகள் சிறிதெனினும் - அவை
விட்டு சென்ற சுமைகள்...
பாரமாய் பல காலங்கள்
கண்ணீருடன் வலம் வரும், உன் நினைவுகளுடன்*

Bad Feelings


வெண்ணிற வானத்தின் குறைகள்
வெளிச்சமாய் தொpந்தன...
இரவில் விண்மீன்களாய்...*

Love The Way You Lie


உணர்வற்ற பறவை நான்
கண்டங்கள் பல சுற்றி வந்தேன்
இளைப்பாற உன் மடிகள் தேடி...*

என் இதயம் இருட்டறையா- நீ
மட்டும் ஓடி ஒளிந்துகொள்ள...*

உன் புகைப்படத்தை படமெடுத்தேன்
இரவு விளக்காய் - என்
இதயத்தினுள்...*

Love never End


மின்னல் மோதி செல்ல
குடைகள் தாளமிட்டது...
உன் பார்வை வேகத்தால்...*
மண் மீது ஓவியமாய் பதிந்தன
உன் கால் தடங்கள்...
வின் மீது மேகமாய் பதிந்தன
உன் பார்வை துளிகள்...
நான் கொண்ட சாபங்களாய் சென்றன
என்றும் உன் ஞாபகங்கள்...*

Life...


நான்...*
வாசமில்லா மலாpல் விழுந்த
கண்கள் இழந்த வண்டு- என்
வாழ்க்கை பயணத்தில்...*

Love fever



தோளில் சாய்ந்து
மவுன கதைகள் பேசுகிறாள்- எனது
காதுக்கும் கேட்காமல்...*

Sunday, January 16, 2011

Tamil Kavithai (தமிழ் கவிதை) - Mangai manitham


விடியாத முகத்தில்
பனித்துளிகள் முத்தமிட...
நிலா ஒன்று வெளியில் வந்தது
விடியலைத் தேடி...*


இந்த குளிர்காயும்
நிலவிற்கு பிடித்தது...*
சுரிய பார்வைதானோ...*

Tamil Kavithai (தமிழ் கவிதை) - கருப்பு துறவி


           கருப்பு-துறவி

காவி அணிந்த துறவி நான்
உறைவிடம் இன்றி அலைகின்றேன்
மோகப்பூக்களின் வீதியிலே
காலணியின்றி நடக்கின்றேன்...
பாதச்சுவடுகள் ஆழமாய் பதிந்தன-என்
கால்கள் நனையாத வரை...*

நாளொரு வீதியாய்
பொழுதொரு கோவிலாய்
நாட்களும் சென்றது...-என்
காவியிலும் கரைபடிய ஆரம்பித்தது...*

மாயங்கள் பல கற்றேன்
மயங்கிய மங்கையரிடத்தில்...
யாகங்கள் பல செய்தேன்
யாசகம் தேடிய இடத்தில்...*

வெண்ணிற வானத்தின் குறைகள்
வெளிச்சமாய் தரிந்தன...
இரவில் விண்மீண்களாய்...*

கருப்பு உடலில்
காவி ஆடை அணிந்தேன்...
கட்டவிழா கூந்தலில்
கரைக்க இயலா பாரத்தை சுமந்தேன்...*
கருமேக நிழலில் மறைய ஆரம்பித்தேன்...
சிந்திய மழைத்துளிகள்
விழிதுளியாய் கரைத்து செல்ல
காவி ஆடை மாறியது...
கதர் ஆடையாய் சிறையினுள்...*

Friday, January 14, 2011

Tamil Kavithai (தமிழ் கவிதை) - Moon fever


இரவுக்கு பனியின்
மேலுள்ள ஈர்ப்பால்...
பாதையை மாற்றிக்கொண்டது- இந்த
தூசு படிந்த நிலா...*

Wednesday, January 5, 2011

Most advanced visiting place near in Kanya kumari - Ramanathichanputhur



Ramanathichanputhur



இயற்கை வளங்களால் சூழப்பட்ட எழில்மிகு கிராமம் எங்கள் இராமனாதிச்சன் புதூர். இது வடதென் துருவங்களாய் (Caste-wise) பிரிந்து இருந்தாலும், இங்கு வாழும் மக்கள் மனதளவில் ஒரேகுலமாய் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவமக்கள், இரு புனிதர்களால் (St. Ignatius - புனித இன்னாசியார் மற்றும் St. Roch - புனித ஆரோக்கியநாதர்) ஆசிர்வதிக்கப்பட்டு வழிநடத்தப்படுகின்றனர். வளமும் - செல்வமும், கலையும் - மனிதமும், கல்வியும் - களஞ்சியமும் தழைத்தோங்கும் கிராமம் எங்கள் இராமனாதிச்சன் புதூர்.


Ramanathichanputhur is a village situated near Marungoor in Kanyakumari District, Tamil Nadu.


The village is divided into two as North and South based on the caste system. Vellalars in the north part and Nadars in the south part of the village. Vellalars are the ancient people of this village and Nadars are settled here from western side of the district, for working in Vellalar's Lands. Vellalars are converted to Christianity during 17th century from nearby villages like Marungoor, Iraviputhur, Theroor etc., and for marriage purposes they get relationship with Vadakkankulam, Kuruvinatham villages, because those vellalars are already in the faith of Christianity.


A church for Lady of Lourdes was built during the 17th century, but for some unknown reason that church was left as it is and a new church for St.Ignatious was constructed and made as the parish church. Now the Old church is renovated and an Infant jesus statue kept inside for worship.

The other part of this village is South Ramanathichanputhur blessed with Saint Roch (Arokianathar) Church attached to Ramanathichanputhur Parish. The people here are mostly Roman Catholics and this parish belongs to the Kottar Diocese. Before the state re-organisation was done, this village was the east boarder of South Thiruvithangoor.


Ramanathichenputhoor surrounded by hills (Nedumallai-east, Kathadimallai-North and Perialkullam pond-West. Via Narithondu there is Short route to Pazhavoor(Trinelvelli). It is one of the east boarder of Kanyakumari Dist.