Sunday, October 30, 2016

தந்தாய் உந்தனின் ஆசீர் (Thanthaay Unthanin Aaseer) - விசுவாசிகள் மன்றாட்டு



தந்தாய் உந்தனின் ஆசீர்
எம்மில் தங்கிடுக!

திருத்தந்தை ஆயர்கள் குருக்களும்
கன்னியர் துறவியர் யாவரும்
உடல் உள்ள நலன்கள் பெற்றிட
உமது அருளும் தா...* - தந்தாய்

இந்நாட்டு மன்னர்கள் அமைச்சர்கள்
எம் நாட்டு ஆட்சியர் மக்களும்
அன்பைப் பொழிந்து உறவில் வளர
வரங்கள் பலவும் தா...* - தந்தாய்

இறைமக்கள் நாங்கள் யாவரும்
விசுவாசம் கொண்டு வாழவும்
ஆன்மீக வாழ்வில் மேலும் சிறக்க
இறையே அருளும் தா...* - தந்தாய்

இன்றைய விழாவை சிறப்பிக்கும்
இளைஞர்கள் குடும்பங்கள் யாவரும்
வேண்டும் வரங்கள் பெற்று மகிழ
ஆசீரும் அருளும் தா...* - தந்தாய்

பலியின் பங்காளர் யாவரும்
அவர்கள் குடும்பத்தின் அனைவரின்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடவும்
நலன்கள் பலவும் தா...* - தந்தாய்

இறந்த ஆன்மாக்கள் அனைத்தையும்
யாரும் நினையா ஆன்மாவையும்
உமது வான் வீட்டில் சேர்த்திடவும்
நித்திய இளைப்பாற்றி தா....* - தந்தாய்

No comments:

Post a Comment

Do U Like This...