Monday, October 3, 2016

தூக்கம் எனும் சதிக்கோட்பாடு (Sleeping Related Mysterious Thoughts)



தூக்கம் எனும் சதிக்கோட்பாடு...!

சூரியன் மறைவு
தூக்கத்தின் உதயம்...
பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கும்
இரவு பகலுக்கும் - நமது
தூக்கத்திற்கும் என்ன சம்பந்தம்...!

சூரிய படைப்புகள் பகலில் கண்விழிப்பும் 
இரவில் கண் அயர்வதும் ஏன்...
பகல் வேளைகளில் எட்டிப்பார்க்காத தூக்கங்கள்
இரவு மட்டும் குறட்டை விடுவது ஏன்...!

எல்லா படைப்புக்கும் முதன்மை சூரியன் என்றால்
இரவு மட்டும் எப்படி
தன்னிச்சையாக உருவாக்கப்பட்டது...
பகலை படைத்த கடவுள் ஏன்
இரவையும் சேர்த்து படைக்கவேண்டும்...!

ஆழ்ந்த உறக்கத்தில் நாம் எங்குதான் செல்கிறோம்
பகல் முழுவதும் விழித்திருந்தாலும் 
மரணம் அருகில் வருவதில்லை 
4 நாட்கள் தூக்கம் இழப்பின் 
அகால மரணம் எப்படி...!

நாளின் ஒவ்வொரு இரவும் 
நம்மை தூங்கவைப்பதே 
நமக்கான மறுநாள் கதையினை 
தொகுத்து எழுதுவதற்க்கா - இல்லை
இதுவும் அடிமைகளின் கோட்பாடா
காலை முழுவதும் உடலுக்கான போராட்டம்
இரவு முழுவதும் விடியலுக்கான உயிரூட்டம்...
எல்லா உயிரினங்களும் எப்படி
இந்த சதிகோட்பாடில் சிக்கியுள்ளன...!

பகலில் நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும்
இந்த மூளை புட்டுபுட்டு வைக்கிறது - அது
பல ஆண்டுகள் முன்னது என்றாலும் - ஆனால்
நேற்றைய கனவுகள் நியாபகம் இல்லாமல்
மறந்து செல்வது ஏன்...!

இரவுகள் ஒரு புதையல் 
தேடி கண்டெடுப்பது கடினம் - அதில்
தூக்கம் ஒரு வெல்ல இயலா சதிகோட்பாடு...
ஆழ்ந்த தூக்கத்தினை கண்டெடுக்கும் எவரும் 
அழியா உடலுடன் ஆயிரமாண்டுகள் வாழலாம் - இது 
மம்மிகளின் கோட்பாடுகள்...

நேர தாவலுக்கும் (Time Travel)
தூக்கத்திற்கும் ஏதோவகையில் சம்பந்தம் உள்ளது
இது மூளையின் இருண்ட மறுபக்கம்
என்பதே என் சதிகோட்பாடு...!

No comments:

Post a Comment

Do U Like This...