Sunday, September 25, 2016

சுவாதியும்... ராம்குமாரும்...!


பொதுமக்கள் நடமாடும் இடத்தில் அநியாயகொலை...
கொலைக்கான ஆதாரங்கள் மற்றும் பரபரப்புகள்...
ஊடகங்களின் இருபாலரை குறித்த கதைவசனங்கள்...
கைது செய்த நாளிலே கொலையாளியென
முன்னிருத்தப்பட்டவன் தற்கொலை முயற்சி...
விசாரணை வியூகங்கள் மற்றும் வாக்குமூலங்கள்...
ஜாதி, மத மற்றும் கட்சி பூசல்கள்...
நாளை ஜாமீன் வழக்கு (கைதிக்காக) வரும் வேளையில் தற்கொலை... - இனி
விசாரணை முடிவுகள் மற்றும் தீர்ப்பு????

கொலை செய்தவனா
கொலைசெய்ய தூண்டியவனா...
தற்கொலை செய்தவனா
தற்கொலை செய்யதூண்டியவனா..
இங்கு யார் குற்றவாளி???

நம்மால் வேடிக்கை பார்க்கவும்..
ஊடகங்களின் கதைவசனங்களை படிக்கவும்...
பதிவிடவும் மட்டுமே முடியும்...
நடந்தது என்ன என்பது யாருக்கு தெரியும்...
யாரிடம் தெளிவான பதில்கள் வெளிப்படும்...!

-முடிவுகள் வெளிப்படுகிறதோ (அ) இல்லையோ... அதற்க்குமுன், ஊடகம் மற்றும் சமூகவலை வாசிகளின் கர்ப்பனைத்தொகுப்புகளை கொண்டு கோலிவுட்டில் படம் தயாரித்து சம்பாதித்து போய்விடுவார்கள்...

சுவாதி மற்றும் ராம்குமார் வழக்கில் இதுதான் நடக்கிறது, நடக்கவும் செய்யும்..!!!

No comments:

Post a Comment

Do U Like This...