Wednesday, September 28, 2016

Little Flower Primary School, Ramanathichenputhur



கைவளைத்து காதை தொட்டதுமுதல்
கால்தூசி தட்டி வெளியேறியது வரை
ஆயிரம் நினைவுகள்... – எங்கள்
சிறுமலர் ஆரம்ப பள்ளியில்...!

எந்த நாளாயினும், காலை பூசையை காணாவிடினும்

மாதா கெபிமுன் கூட்டம் சேர்ந்துவிடும்...
தரிசிப்பதைவிட வருகையை உருதிபடுத்ததான் - இது 
அடிக்கு பயந்துதான் என்றாலும்
நேரம் தவறாமை, காலை துயில் எழுதலென 
கற்று தந்ததும் அதுதானே - நான் 
இன்றும் உணர்கிறேன் அலாரத்தின் ஒலிகளில்...!

பள்ளி துவக்கமணி அடிக்க விறுவிறுப்பு
மதர் மேடையை கடந்து வந்த சாவிகள்...
வகுப்புதான்டாமல் இருப்பவனும், உயர்ந்தவனாக்கப்படுகிறான்
எனது பள்ளியை மணியடித்து துவங்கி வைக்கும்பொழுது...!

காலைதோறும் உறுதிமொழி, ஆசிரியர் உரை வேண்டும்
அட்டையை பார்க்க புத்தகங்களுக்கு ஜூன் ஓன்று வேண்டும்
துவைத்த பைகளின் கலரைகாண புதுவருடம் வேண்டும்
வருடம்பார்த்து கிடைக்கும் அரசு துணி மற்றும் காலணிகள்
அளவுதான் சரியாய் அமையவேண்டும்..!

மேசை, நாற்காலி இல்லா வகுப்புகள்
தட்டி வைத்து பிரித்திரிந்த வகுப்பறைகள்
கம்பிகள் இல்லா ஜன்னல் கதவுகள்
ஆசிரியர் வகுப்பில் இல்லை என்பதை 
காட்டிகொடுக்க அதுபோதும்...!

இன்றைய நாள் சிறப்பாய் அமைய
ஜோதிடர்களை நாடியதில்லை – ஆசிரியர்கள் வரும்
9 மணிபேருந்தின் வருகை ஒன்றே போதும்...!

கட்ட, நெட்ட என ஆசிரியர்கள் வேறுபாடு
வகுப்புக்குள் வந்துவிட்டால் தாறுமாறு...
ஓன்று, இரண்டிலே தயாராகிவிடுவோம்
பெரிய வகுப்பு மாணவர்களின் கதரலைக்கேட்டு...!

பள்ளி வகுப்பு கால அட்டவணையில்
விளையாட்டு நேரம் அதிகமாகவும்
கட்ட மற்றும் நெட்ட ஆசிரியர்களின் 
பாடநேரம் குறைவாகவும் இருந்தாலே - அந்த
வருடம் சொர்க்கம்தான்...!

கத்தியெடுத்தவன் கத்தியால் அழிவான் என்பதுபோல் – இங்கு
பிரம்பு கொடுத்தவன் பிரம்பால் அடிவாங்குவான் என்பது
எழுதப்படாத சதிகோட்பாடு..!

ஒரே ஊர் என்பதால் விடுமுறையெடுக்க 
காரணங்கள் முளைப்பதில்லை.. - அப்படி எடுத்தாலும் 
சோதனைசெய்ய CBI ஆபிசர்கள் வீட்டுக்கே வராமலிருப்பதுமில்லை
குண்டுகட்டாக தூக்கிசெல்வதே அவர்களின் வேலை
பொய்களுக்கு செமையான மருந்து கொடுக்கப்படும்
எல்லா ஓலங்களுக்கும் பிறகு...!

கையெழுத்து திருந்த எத்தனைமுறை 
கைகளை பிரம்புகள் பதம்பார்த்திருக்கும்
பெற்றோரை அழைத்துவந்தும் உபயோகமில்லை
பெற்றோர்முன் காதைகிள்ளும் ஆசிரியரை 
கண்டும்காணாமல் இருப்பதே அவர்ககளின் நிலைமை - ஏனெனில் 
அவர்கள் காதிலும் தடம்பதித்த கைகள்தானே...!
அடித்தாலும், நுள்ளினாலும்
வழியும் மூக்கினையும், கண்ணீரையும் துடைக்கும் 
மதர்களையும், ஆசிரியர்களையும் முறைக்கமுடியுமா..!

சூசையப்பர் சுரூபம் கீழே விளக்குத்தண்டு
அணில்வந்து செல்லும், நாம் போடும் குச்சிகளை சாப்பிடும்
எனும் வதந்தி பள்ளி முழுவதும் உண்டு...
சூசையப்பரை விட, அதன்கீழ் குச்சியைபோட்டு
அனிலிடம் வேண்டுதல் வைத்ததே அதிகம்..!

தலைவர்கள் பிறந்தநாளில் மட்டும் ஸ்பெஷல் புளிசாதம்..
விடுமுறைநாளாயினும் அடைக்கலாமாயிடுவோம்
ஒரு ஆப்பை மிச்சம் கொசுறு சாதம்
பாத்திரங்கள் விரும்புவதில்லை..
வாலங்காய் இலைதான் வாழ்வளிக்கும்..
கைப்பிடி சோறாயினும் வீடுவரை கொண்டு செல்வதில்
கண்ணிமைக்கா கவனம் தேவைப்படும்..!

பள்ளியைதாண்டி ஒரு கல்விநிலையம் உண்டு
திரேஸ் அக்கா வீடு
புத்தகப்பைகள் விழிப்பதும் தூங்குவதும் அங்கேதான்
அவர்களுக்கு ஓலைமுனைதல் தொழிலானாலும் - அதன் 
கம்புகள் தான் அதிகமாக பிய்யப்படுகின்றன...!

மதியஉணவு இடைவேளை சிறிதெனினும்
அதனுள் ஆயிரம் சந்தோசங்கள் புதைந்திருக்கும்
தெளிந்து மேலோட்டமான பருப்பும், சாதமும் வாங்கு - என 
பாத்திரத்தை பத்திரப்படுத்திக்கொண்டு - கிளம்பும் 
ஒலிம்பிக் ஓட்டம் - வீட்டில் 
குழம்போ, தொவையலோ கிடைத்ததை வாரிக்கொண்டு
சாப்பிட வரிசைமுடியுமுன் வந்துநிற்கும் – அதற்காக
ஒரு கும்பலே காவலுமிருக்கும்...!

காலை கடன்களை மதியம் கழிப்பதற்கு ஜாலி வாக்கிங்
சிலபல விளையாட்டும் 
ஊசி இலையை தேடி எடுப்பதும்
தினம்தோறும் அரங்கேறும்..!

உண்ட மயக்கம் தீர மாலைதான் விளையாட்டு வகுப்புகள்
அங்கு தனிதன்மை சார்பு விளையாட்டுகளைவிட
குழுக்களுக்கான விளையாட்டுகளே அதிகம்...
தோட்ட பராமரிப்பு, பள்ளி பராமரிப்பு – என 
எதுவாயினும் சலிப்பதில்லை
நல்ல விளக்குமாறு அடுத்தவன் எடுத்துவிட்டான் - என 
ஆதங்கபட்டதுதான் அதிகம்...!

பள்ளி கிணறுதான் வற்றாதது
துள்ளித்தான் பார்ப்பதாயினும்
தூர்வாற அஞ்சுவதில்லை...
தினமும் நீர் இறைக்கும் வாளி
கிணற்றுக்குள் கைரிழந்து செல்லும் தவறியல்ல
வாளியை வெளியிலெடுக்க கருவியைதேடுவதை விட
மதர்களை தேடுவார்கள்..
எப்போது சென்றாலும் இனிப்புகள் வழங்கி 
இனிதாய் வரவேற்ப்பது அவர்கள்தானே...!

சிலுவைபாதை வழிபாடுகளில் கலந்து நல்லவனாய் காட்டிலும்
அமராவதிவிளை பாறைகளில் ஒளிந்து, பள்ளிக்கு செல்லாமல்
இயேசுவின் சீடர்கள்போல் மாறிவிடுகிறோம் என்பது உண்மை...!

பேக்கரியும் பீசாவும், கப்சியும் காணாத காலத்தில் 
இனிப்புகளை பிரித்து வகைப்படுத்தி தர 
இருதயராஜ் அண்ணனின் கடைதவிர வேறு உண்டா.. 
கல்கோனாவிலே எத்தனை பல்கள் உடைந்தது யாருக்குதெரியும்.. 
இலந்தை பழமும், பொடியும் சுவைக்காத வாய்கள் உண்டா 
தேன்மிட்டாயும், ஆரஞ்சு மிட்டாயும் எத்தனை 
பிறந்தநாள்களை வசீகரித்துள்ளன...! 

சட்டை பொத்தான்களையும், 
அரைக்கால் டவுசர்களின் ஓட்டைகளை அடைப்பதே 
புது துணி கிடைக்கும்வரை அம்மக்களுக்கு 
கொடுக்கப்படும் தலையாய வேலை..!

எங்களது கால்களை கண்டதும் செருப்புக்கு 
என்ன கோபமா கடித்து வைத்துவிடுகிறது.. 
அதனால்தான் என்னவோ 
காடுகள், வரப்புகள், குளங்கள் என
எங்கள் பாதசுவடுகள் பதியாத இடமில்லை...!

குளம் வற்றினாலும் 
மழைவெள்ளம் வந்தாலும்
கிணறு தூர்வாரினாலும் - அங்கு 
இல்லாமல் இருப்பதில்லை - எவ்வளவுதான் கிடைத்தாலும் 
சமநிலை பகிர்வை மறப்பதில்லை...!

மரம் மற்றும் மலைகள் ஏறுதல், மீன் பிடித்தல், நீச்சல் அடித்தல் 
மண் வெட்டுதல், களை பறித்தல், சுடுக்காய் தேடுதல் 
சுக்குநாறி பறித்தல், நாற்று நடுதல், விழாக்களை சிறப்பித்தல்
என அடுக்கிகொண்டே போகலாம் – ஆனால்
எதற்கும் ஆசான்கள் தேவைப்பட்டதுமில்லை
கால்கள் அமைதியாய் வீட்டில் உறங்கியதுமில்லை
உடம்பு பெருத்த, கண்ணாடி அணிந்த மாணவர்களையும் 
எங்கள் பருவத்தில் கண்டதுமில்லை...!

இன்னும் எத்தனையோ நினைவுகள் மறந்தாலும்
பள்ளியில் கடந்துவந்ததை யாரும் மறப்பதில்லை...
அறிவும், அன்பும், ஒற்றுமையும் சேர்ந்த கூடாரமது – இன்று
ஆங்கிலகல்வியென தனிமைப்படுத்துவதை நினைத்து
கண் கலங்குகிறது...
உங்கள் மூளைக்கு தீனிபோட்டது
உங்கள் பிள்ளைகளை பட்டினி போடுமா..
நமது பெருமை
இல்லாத செல்வங்களை திரட்டுவது அல்ல
இருக்கிற செல்வங்களை பாதுகாப்பதே..!
.
.
- J. பிரிட்டோ ராஜ், Ramanathichen Puthur.

Sunday, September 25, 2016

Be yourself & Live Your Life...!

வாழ்க்கையில் முன்னேறியவர்களின்
Inspiration Story-களில் மூழ்கிபோய்விடாதீர்கள் - பிறகு
உங்களது Inspiration Story பயனற்றதாய் போய்விடும்..!
ஏனெனில்...
அவர்களது வாழ்க்கை பாதையைவிட - உங்களுடையது
கரடுமுரடானதாகவோ (அ) சுவாரஸ்யமானதாகவோ இருக்கலாம்...!!

So Be yourself & Live Your Life...!

புறக்கணிப்புகள்...! (Discouragement)


சில புறக்கணிப்புகள் தெரியாமல் நடக்குமானால் - அங்கு
விலகி செல்வதை விட
அருகில் உறவாடுவதே சிறந்தது...!

சில புறக்கணிப்புகள் தெரிந்தே நடக்குமானால் - அங்கு
அருகில் உறவாடுவதை விட
விலகி செல்வதே உயர்ந்தது...!

தலைவனாக வாழ கற்றுக்கொள்..! (Be A Leader)

நீ நல்லவனோ (அ) கெட்டவனோ
தலைவனாக வாழ கற்றுக்கொள் - ஏனெனில்
ஆயிரம் தொண்டர்கள் உனக்காக செத்தாலும்,
உன்னால் சாகடிக்கப்பட்டாலும்...
சரித்திரம் தலைவனைப்பற்றி தான் பேசும்
ஆயிரம் தொண்டர்களை அல்ல...

வாழ்ந்தால் நேதாஜி போல் வாழ்
செத்தால் காந்தி போல் சாகு - அப்போதுதான்
எப்போதும் மக்கள் எதிரினில் சிரித்துகொண்டிருப்பாய்..
பணமாகவோ (அ) பிணமாகவோ...!!!

கட்சிசார் கொள்கைகள் மற்றும் போராட்டங்கள் தேவையா???

ஊர்ல பத்து பத்துபேரா, பத்து அரசியல் கட்சிகளை பின்பற்றும்போது, எங்கிருந்து ஒற்றுமையான கருத்துக்கள் கிடைக்கும்..!

ஒருத்தன் மாவட்ட கட்சி
ஒருத்தன் மாநில கட்சி
ஒருத்தன் தேசிய கட்சி
மற்றவன் அன்னாடங்காட்சி..!

எங்கையோ இருக்கிற அரசியல் தலைமைகள் சொல்றது நம்ம காதுக்கு கேக்குது, பக்கத்துல இருக்கிறவன் கூக்குரல் மட்டும் கேக்கவே மாட்டேங்குது..!

என் கட்சி தலைவர் சொன்னால்தான் போராட்டத்தில் இறங்குவேணு ஒருத்தன்.. என் கட்சி தலைவருக்கு இந்த போராட்டத்தில் ஈடுபாடில்லை, நாங்கள் பங்கேற்கமாட்டோம்னு இன்னொருத்தன்...!

கடைசியில போராட்டத்திற்கு ஆள் சேர்க்க நடிகர்களையும், நடிகைகளையும் காலை பிடித்துகொண்டு அலைவது...!

எவ்வாறு ஆங்கிலேயன் நம்மை ஓன்று சேரவிடாமல் தடுத்தானோ, அதேத்தான் இப்பொழுதும் கட்சிகள் பெயரில் நடக்கிறது...!

மதசார்பு
இனசார்பு
மொழிசார்பு
இதைவிட கொடியது
கட்சிசார் கொள்கைகள் மற்றும் போராட்டங்கள்..!

உனக்காக மற்றும் உன் சமூகத்துக்காக போராடும்போது, எந்த கட்சி கொள்கைகளும் தேவையில்லை என்று எப்பொழுது முன்வருகிறாயோ, அன்றுதான் விடியலும் உண்டு, மாற்றமும் உண்டு...!

இல்லையெனில்..
நாளை நீ தெருவில் கிடந்தால், உனது உயிர் பந்தங்களாகக இருந்தாலும், அடுத்த கட்சிக்காரன் என்று உதறித்தள்ளிவிடுவார்கள் ஜாக்கிரதை...!!!

காவிரியும்... போராட்டங்களும்..!


போராட்டம் என்றாலே
பொதுவுடைமைகளை அழிப்பதும்
சக-தோழர்களை தாக்குவதும்தான் - என்பது
திட்டமிட்டு நடத்தபடுவதில்லை - மாறாக
வெளிப்படையாக கற்பிக்கபடுகின்றன...!

தீர்ப்பு வழங்கியது யார்
தீர்ப்பை செயல்படுத்தியது யார் - நீங்கள்
அடிப்பது யாரை...
இந்த உரஊட்டலுக்கு
படித்த தலைமுறையும்
அடிமையாகிறது என்பது வெக்ககேடு..!

தினசரி கூலிக்காக
ஆயிரம் யோசிப்பவர்கள்..
சமுதாய பிரச்சினைகளுக்கும்
மாற்றுவழிகளை யோசியுங்கள் - மாறாக
வன்முறையை புகட்டாதீர்கள்
இளையசமுதாயம் கவனித்துக்கொண்டே இருக்கிறது..!!!

சுவாதியும்... ராம்குமாரும்...!


பொதுமக்கள் நடமாடும் இடத்தில் அநியாயகொலை...
கொலைக்கான ஆதாரங்கள் மற்றும் பரபரப்புகள்...
ஊடகங்களின் இருபாலரை குறித்த கதைவசனங்கள்...
கைது செய்த நாளிலே கொலையாளியென
முன்னிருத்தப்பட்டவன் தற்கொலை முயற்சி...
விசாரணை வியூகங்கள் மற்றும் வாக்குமூலங்கள்...
ஜாதி, மத மற்றும் கட்சி பூசல்கள்...
நாளை ஜாமீன் வழக்கு (கைதிக்காக) வரும் வேளையில் தற்கொலை... - இனி
விசாரணை முடிவுகள் மற்றும் தீர்ப்பு????

கொலை செய்தவனா
கொலைசெய்ய தூண்டியவனா...
தற்கொலை செய்தவனா
தற்கொலை செய்யதூண்டியவனா..
இங்கு யார் குற்றவாளி???

நம்மால் வேடிக்கை பார்க்கவும்..
ஊடகங்களின் கதைவசனங்களை படிக்கவும்...
பதிவிடவும் மட்டுமே முடியும்...
நடந்தது என்ன என்பது யாருக்கு தெரியும்...
யாரிடம் தெளிவான பதில்கள் வெளிப்படும்...!

-முடிவுகள் வெளிப்படுகிறதோ (அ) இல்லையோ... அதற்க்குமுன், ஊடகம் மற்றும் சமூகவலை வாசிகளின் கர்ப்பனைத்தொகுப்புகளை கொண்டு கோலிவுட்டில் படம் தயாரித்து சம்பாதித்து போய்விடுவார்கள்...

சுவாதி மற்றும் ராம்குமார் வழக்கில் இதுதான் நடக்கிறது, நடக்கவும் செய்யும்..!!!

உலக அமைதி நாள் 2016 (World Peace Day 2016)


நம்மில் எத்தனையோ பேர் இன்றும் மதம், இனம், ஜாதி, மொழி என்ற கொடிய மிருகங்களை மனதில் மறைத்துக் கொண்டு, விட முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...!

மனிதம் அமைதியை விரும்புவதே இவைகள் அனைத்திலிருந்தும் விடுபடசெய்யும்...!!

சுயநலமற்ற அமைதியிலிருந்தே அன்பான, ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். மற்றவர்களின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள். ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து வாழுங்கள் மற்றும் அன்பை பகிருங்கள்...!!!

மேன்மையானது...! உண்மையானது...! (TRUE LOVE)


அயலானிடம் அன்புசெலுத்துங்கள் - அவன்
உங்களுக்காக வாழ்கிறேன் என்பதைவிட
உங்களால்தான் வாழ்கிறேன் என்பதே
மேன்மையானது...!
உண்மையானது...!

Monday, September 5, 2016

ஆசிரியர்தின வாழ்த்துக்கள் (Teachers Day - 2016)


நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற - இந்த
நாட்டிலுள்ள மாணவர்களின் வாழ்வு முன்னேற...
என்றும் நல்லவங்க எந்நாளும் உங்க பின்னாலே - நீங்க
நினைச்சதெல்லாம் நடக்கும் உங்க கண்ணுமுன்னாலே..!

படிக்கும் மாணவர்களே ஒன்றுகூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்...
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்னவழி என்று எண்ணி பாருங்கள்...
ஆசிரியர் சொன்னவழி சென்று நன்மை தேடுங்கள்...!

நாம் பாடுபட்டு படித்ததை கற்பிக்கும்போது இன்பம் - வரும்
மாணவர்கள் எதிர்காலத்தை காணும்போது இன்பம்...
பொருளாசையாலே படிக்கும் படிப்பு சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றுமில்லை...!

நதியைப்போல நாமும் நடந்து பலன் தரவேண்டும்
கடலைபோலே விரிந்த இதயம் இருந்திடவேண்டும்...
வானம்போல ஆசான் சொன்னதை போதித்திடவேண்டும் - நாம்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் நிலைத்திடவேண்டும்...!