Sunday, January 8, 2017

இரவு பாதயாத்திரை, பக்ரைன் (Church to Home)

இரவு நேரத்தில்
கடும் குளிரில்
நானும் - என்
தொலைபேசியின் இதமான ராகமும்
ஒன்றாக பயணிக்கிறோம்...!


வாயும் முனுமனுக்கிறது
கையும் விரல்வித்தை காட்டுகிறது - ஏதோ
இசையிலே பிறந்து வளர்ந்தவன் போல...
பார்ப்பவர்கள் பைத்தியம் என்பார்களோ
இசை மேதை என்பார்களோ தெரியாது - ஆனால்
ஏதோ தனிமையை மிஞ்சிய இதம்
மனதை வருடுகிறது...!

என் பாட்டிற்கு இசையமைக்க
ரீங்கரிக்கும் வண்டுகள் இல்லை..
எனக்காக ஆடிப்பாட
மின்மினி பூச்சிகள் இல்லை...
இரவை கடிந்து கொண்டேன் - நீ
எனது ஊரை போன்றில்லை என்று...!
ஆனாலும்...
இங்குள்ள இரவுகள் - என்
மனநிலையை அறிந்துகொள்கிறது...
எப்பொழுதும் என்னை அமைதியாக வரவேற்கிறது...
ஒருவேளை என் செருப்பு சத்தங்கள்
புரிய வைக்குமோ... என்னவோ...!

எதிரே வேகம் குறைக்காமல் செல்லும் வாகனமும்
முன்னே குழந்தைகளோடு குதுகலிக்கும் குடும்பமும் - எனது
பொறாமையை சீண்டி பார்க்கின்றன...
என் நிழல் சமாதானப்படுத்தியது
அவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்காதென்று...!

நெடுதூர நடை பயணமில்லை
வீட்டிற்கும் கோவிலுக்கும்
பத்து நிமிடங்கள் தான் - ஆனால் தினமும்
நிறைய பாடங்கள் கற்றுதருகிறது...
இன்றைய கவிதையைப் போல...***


-ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...