Sunday, January 15, 2017

ஜல்லிக்கட்டும்... தமிழின அடக்குமுறைகளும்... (Cultural Oppression)



கஞ்சி ஊத்த அரிசி இல்லை
அடுப்படிகள் காய்கிறது...
மொண்டு குடிக்க நீருமில்லை
வானம் பல்லை இளிக்கிறது...
ஒரேநாடு ஒரேமக்கள்
பேச்சு மட்டும் இனிக்கிறது...
எல்லைகள் தாண்டி உதவிகேட்டால்
நீதி கைகொட்டி சிரிக்கிறது...*

பன்றிக்கறியும், மாட்டுக்கறியும் தான்
இன்று தேசப்பற்று பேச்சு...
சகிப்பின்மையும், சண்டையும் தான்
வெளிநாட்டில் வாழ தகுதியாச்சு...
சமத்துவங்கள் வேண்டுமென்று சுதந்திரபேச்சு
எனது கலாச்சாரம் அழிகிறது, நீதியும்போச்சு
தெருவில் வந்துபோராடி நாள்பகல் ஆச்சு
கிடைத்த அடிதான் மிச்சம் மானமும்போச்சு...*

நாட்டின்...
பொருளாதார முன்னேற்றம் வேண்டும்
சேர்ந்து குரல்கொடுத்தோம்... - எங்கள்
காலாச்சார பாதுகாப்பு வேண்டும்
ஏனோ தனிமைபடுத்தபட்டோம்...*

பேசும் மொழிகள் பலவாயினும்
ஒரேநாடு என வாழ்ந்து வருகிறோம்...
நாம் கத்தும் கதறல் புரியாத
காதுகள் இருந்தால் எங்கு
சென்று பிரச்சனைகளை முறையிடுவோம்...*

ஊருக்கொரு நீதியென்று கையேந்தவில்லை
நான் சாப்பிடும் இட்டிலிக்குள்
சப்பாத்தியை திணிக்கிறாய்
ஏன் என்று புரியவில்லை...*

மாநில எல்லை தாண்ட முடிவதில்லை
நாங்கள் என்ன தனிநாடா விளங்கவில்லை
நம்மை மதிக்கிறார்களா, நேசிக்கிறார்களா தெரியவில்லை
நமது ஊடகங்களும் மொழிபெயர்ப்பு செய்வதுமில்லை
ஆண்டபரம்பரை என்பதில் அர்த்தமில்லை நாம்
ஓன்றுசேராமல் இதற்க்கு என்றும் முடிவுமில்லை...*

-ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...