Sunday, January 22, 2017

எழுவோம் நமக்காக நாளைய தலைமுறைக்காக (Tamil Nadu Youth Raise)



எழுவோம் நமக்காக...
நாளைய தலைமுறைக்காக...!!!

விவசாயி செத்தாலென்ன
விவாசாயம் அழிந்தாலென்ன - நான்
என்ன இலவசமாகவா சோறு சாப்பிடுகிறேன்..!

ஜல்லிக்கட்டு நடந்தாலென்ன
மாடுகள் இனம் அழிந்தாலென்ன - நான்
என்ன இலவசமாகவா பால் குடிக்கிறேன்..!

கூடங்குளம் திறந்தாலென்ன
அனுக்கதிர்வீச்சில் செத்தாலென்ன - நான்
என்ன இலவசமாகவா மின்சாரம் பெருகிறேன்..!

மணல் கொள்ளை நடந்தாலென்ன
ஆறுகள் அழிந்து போனாலென்ன - நான்
என்ன இலவசமாகவா வீடு கட்டுகிறேன்..!

லஞ்சம் வாங்கினாலென்ன
நாடு முன்னேறாவிட்டாலென்ன - நான்
என்ன இலவசமாகவா தொழிலைசெய்கிறேன்..!

கல்வி வியாபாரமானாலென்ன
படித்தும் வேலை கிடைக்காவிட்டாலென்ன - நான்
என்ன இலவசமாகவா பள்ளி நடத்துகிறேன்..!

காவிரியில் நீர் வந்தாலென்ன
சாகுபடி கருகி போனாலென்ன - நான்
என்ன இலவசமாகவா உணவைபெறுகிறேன்..!

மதுக்கடைகள் திறந்தாலென்ன
மக்கள் குடியினால் செத்தாலென்ன - நான்
என்ன இலவசமாகவா வாங்கி குடிக்கிறேன்..!

எல்லாம் விலைக்கு எளிதாக
சந்தைகளில் கிடைப்பதால் என்னவோ...
விவசாயத்திற்காக தூக்கிலிடும் விவசாயிகள்
ஜல்லிக்கட்டின்றி அழியும் மாட்டினங்கள்
அனுக்கதிர்வீச்சின் அபாயத்தில் வாழ்பவர்கள்
மணலில்லாமல் அழியும் ஆறுகள்
லஞ்சத்தால் முன்னேறா கிராமங்கள்
கல்விக்காக கையேந்தும் தலைமுறைகள்
நீரின்றி கருகும் பயிர்கள்
குடியினால் அழியும் குடும்பங்கள் - இன்று
உங்களுக்கு தேவைப்படாமல் போகலாம்..!

இப்பொழுது...
உட்கார்ந்து தின்று சட்டம் போடுகிற நீங்கள் - நாளை
உழைத்து திங்க வீதிக்கு வரும்போது - இந்த
தமிழினமே சுடுகாடாய் மாறியிருக்கும்..
சோலைவனத்தை பாலைவனமாக்கிவிட்டு
கையேந்தி நிற்ப்பீர்கள் - இன்று
சட்டம்போட கைகூலி கொடுத்தவனைப்பார்த்து..***

-ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...