Monday, December 12, 2016

தலைவன் ஒருவன் பிறப்பானோ எங்களுக்காக...! (A Leader)



ஓட்டு போட்டவன் வீதியிலே
வெற்றி பெற்றவன் கோட்டையிலே...
செல்லுலாய்டில் வந்தவன் தலைவனடா
செல்லாக்காசு மக்களடா...*

கேட்க துணிச்சல் இல்லையே
மக்களின் நண்பனும் துரோகியே...
தெருவில் தேடி வந்தார்களே – இன்று
தனியாய் புலம்ப வைத்தார்களே...*

பேச நாதி இல்லாமல் போகுது
பத்திரிக்கையும் பலதாரகாதல் புரியுது...
வெள்ளமும் விளைச்சலும் பொய்ந்து போனால்
வீதி வந்து கையேந்த தோணுது...*

கறைபடியா வெள்ளை சட்டை ஏதடா
கருப்பு கோட்டுக்குள் தஞ்சமடைவதை பாரடா...
பேசி பேசி நாக்கும் வறண்டு போனதடா
டீ கடைக்கும் பொழுது நல்லாபோகுதடா...*

சோத்துக்கும், பாட்டிலுக்கும் நான் அடிமையடா
பசியும் பஞ்சமும் என் சொந்தமடா...
பால் ஊத்தி, கொடி ஏற்றி வளர்த்தேனே – இன்று
அஞ்சுக்கும் பத்துக்கும் அலைகிறேனே...*

5 வருடமும் இப்படித்தான் போகுது - எல்லாம்
முன்னேறியதா டீவியும் படம்காட்டுது...
தார் ரோடு இன்டெர்லாக் ஆகுது
விலைவாசிமட்டும் என்தலையில விடியுது...*

கோடிமக்கள் தலையில் அடிக்கிறோம்
அனுமதிக்க நாதியில்லை...
கோட்டையை எதிர்த்தவன் நேரில் பார்க்கிறான்
கேட்க நாதியில்லை...*

ஓட்டுக்களோடு எல்லாம் முடிந்தது
நாட்களும் இப்படித்தான் கடந்து போகுது...
காலம்தான் வறுமா எங்கள் வளர்ச்சிக்காக
தலைவன் ஒருவன் பிறப்பானோ எங்களுக்காக...***

-ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...