Monday, December 12, 2016

தலைவன் ஒருவன் பிறப்பானோ எங்களுக்காக...! (A Leader)



ஓட்டு போட்டவன் வீதியிலே
வெற்றி பெற்றவன் கோட்டையிலே...
செல்லுலாய்டில் வந்தவன் தலைவனடா
செல்லாக்காசு மக்களடா...*

கேட்க துணிச்சல் இல்லையே
மக்களின் நண்பனும் துரோகியே...
தெருவில் தேடி வந்தார்களே – இன்று
தனியாய் புலம்ப வைத்தார்களே...*

பேச நாதி இல்லாமல் போகுது
பத்திரிக்கையும் பலதாரகாதல் புரியுது...
வெள்ளமும் விளைச்சலும் பொய்ந்து போனால்
வீதி வந்து கையேந்த தோணுது...*

கறைபடியா வெள்ளை சட்டை ஏதடா
கருப்பு கோட்டுக்குள் தஞ்சமடைவதை பாரடா...
பேசி பேசி நாக்கும் வறண்டு போனதடா
டீ கடைக்கும் பொழுது நல்லாபோகுதடா...*

சோத்துக்கும், பாட்டிலுக்கும் நான் அடிமையடா
பசியும் பஞ்சமும் என் சொந்தமடா...
பால் ஊத்தி, கொடி ஏற்றி வளர்த்தேனே – இன்று
அஞ்சுக்கும் பத்துக்கும் அலைகிறேனே...*

5 வருடமும் இப்படித்தான் போகுது - எல்லாம்
முன்னேறியதா டீவியும் படம்காட்டுது...
தார் ரோடு இன்டெர்லாக் ஆகுது
விலைவாசிமட்டும் என்தலையில விடியுது...*

கோடிமக்கள் தலையில் அடிக்கிறோம்
அனுமதிக்க நாதியில்லை...
கோட்டையை எதிர்த்தவன் நேரில் பார்க்கிறான்
கேட்க நாதியில்லை...*

ஓட்டுக்களோடு எல்லாம் முடிந்தது
நாட்களும் இப்படித்தான் கடந்து போகுது...
காலம்தான் வறுமா எங்கள் வளர்ச்சிக்காக
தலைவன் ஒருவன் பிறப்பானோ எங்களுக்காக...***

-ஜோ. பிரிட்டோ ராஜ்

Thursday, December 8, 2016

சுவாமி கிருபையாயிரும் – மாதாவின் பிரார்த்தனை மற்றும் மன்றாட்டு மாலை பாடல் (Matha Prayer Tamil Song Lyrics - Swami Kirubaiyayirum)



சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
கிறிஸ்துவே பிரார்த்தனை கேட்டருளும்
கிறிஸ்த்துவே தயவாய் கேட்டருளும்

விண்ணகத் தந்தை பிதாவே
உலகத்தை மீட்ட சுதன் தேவா
பரிசுத்த ஆவி இறைவனே
எம்மேல் இரக்கம் வைத்தருளும்

புனிதம் நிறைந்த மாமரியே
இறைவனின் புனித மாதாவே
கன்னியரில் உயர் கன்னிகையே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்துவை ஈன்ற மாதாவே
திருச்சபையோரின் மாதாவே
திருவருட்கொடைகளின் மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மாகா பரிசுத்த மாதாவே
பழுதற்ற கன்னி மாதாவே
மாசற்ற கன்னி மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னிமை வழுவா மாதாவே
பேரன்பிற்குரிய மாதாவே
பெரும்வியப்பான மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நல்ல ஆலோசனை மாதாவே
சிருஷ்டிகருடைய மாதாவே
எங்கள் மீட்பரின் மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருச்சபையினுடைய மாதாவே
வணக்கத்திற்குரிய மாதாவே
துதிகளுக்குரிய மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சக்திமிகுந்த கன்னிகையே
இறக்கமிகுந்த கன்னிகையே
விசுவாசியான கன்னிகையே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தருமத்தினுடைய கண்ணாடியே
ஞானத்தின் நல்ல பிறப்பிடமே
எங்கள் மகிழ்வின் காரணமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஞானம் மிகுந்த பாத்திரமே
மகிமை விளங்கும் பாத்திரமே
உன்னத பக்தியின் பாத்திரமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைபொருளான ரோஜாவே
தாவீது அரசரின் கோபுரமே
தந்த மயமான கோபுரமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தங்க மயமான ஆலயமே
வாக்குத்தத்தின் நல் பெட்டகமே
வானக எழில்மிகு வாசலே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விடியற்காலத்தின் விண்மீனே
வியாதியுற்றோருக்கு ஆரோக்கியமே
பாவிகள் யாவர்க்கும் அடைக்கலமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

துண்புறுவோருக்கு தேற்றரவே
கிறிஸ்தவருடைய சகாயமே
சம்மனசுக்களின் ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பிதா பிதாக்களின் ராக்கினியே
தீர்க்க-தரிசிகளின் ராக்கினியே
அப்போஸ்தலர்களின் ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைசாட்சியரின் ராக்கினியே
துதியர்களுடைய ராக்கினியே
கன்னியருடைய ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களுடைய ராக்கினியே
பிறவிபாவமற்ற ராக்கினியே
விண்ணேற்படைந்த ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச்செபமாலையின் ராக்கினியே
சமாதானத்தின் ராக்கினியே
புனித ஆரோக்கிய மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உலகின் பாவங்களைப் போக்கும் உத்தம இறைவனின் செம்மறியே-3
குழு: எங்கள் பாவங்கள் பொறுத்தருளும் – 2
குழு: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் – 2
குழு: எம்மேல் இரக்கம் வைத்தருளும் – 2

Sunday, December 4, 2016

யாருக்காக இந்த வாழ்க்கை...! (Why are We Here?)



யாருக்காக இந்த வாழ்க்கை...!

இருப்பது ஒருவாழ்க்கை என 
பணத்தைகொட்டி அனுபவிப்பவர்களும் இருக்கிறார்கள்...
ஏன் இந்த வாழ்க்கை என 
உழைப்பைகொட்டி சோகப்படுபவர்களும் இருக்கிறார்கள்...

இன்று "உடல்வருத்தி உழைத்தால்
நாளை சந்தோசாமாக" இருக்கலாம் என்பதுகூட
முதலாளி வர்க்கத்தின் விளம்பர பேச்சுக்கள் மற்றும் தத்துவங்கள் போல, உழைப்பின் பலனை ஆண்டாண்டு காலம் அவன்தானே அனுபவிக்கிறான்...!!

வாழ்க்கையை மாற்ற கடவுளை நாடினால், இறந்தபிறகுதான் சொர்க்கமும் கிடைக்குமாம், ஒருவேளை கடவுளும் மக்களின் வாழ்க்கையை A, B, C Center-களாக பிரித்து வைத்து ரசிக்கிறாரோ என்னவோ...!!!

Sunday, October 30, 2016

தந்தாய் உந்தனின் ஆசீர் (Thanthaay Unthanin Aaseer) - விசுவாசிகள் மன்றாட்டு



தந்தாய் உந்தனின் ஆசீர்
எம்மில் தங்கிடுக!

திருத்தந்தை ஆயர்கள் குருக்களும்
கன்னியர் துறவியர் யாவரும்
உடல் உள்ள நலன்கள் பெற்றிட
உமது அருளும் தா...* - தந்தாய்

இந்நாட்டு மன்னர்கள் அமைச்சர்கள்
எம் நாட்டு ஆட்சியர் மக்களும்
அன்பைப் பொழிந்து உறவில் வளர
வரங்கள் பலவும் தா...* - தந்தாய்

இறைமக்கள் நாங்கள் யாவரும்
விசுவாசம் கொண்டு வாழவும்
ஆன்மீக வாழ்வில் மேலும் சிறக்க
இறையே அருளும் தா...* - தந்தாய்

இன்றைய விழாவை சிறப்பிக்கும்
இளைஞர்கள் குடும்பங்கள் யாவரும்
வேண்டும் வரங்கள் பெற்று மகிழ
ஆசீரும் அருளும் தா...* - தந்தாய்

பலியின் பங்காளர் யாவரும்
அவர்கள் குடும்பத்தின் அனைவரின்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடவும்
நலன்கள் பலவும் தா...* - தந்தாய்

இறந்த ஆன்மாக்கள் அனைத்தையும்
யாரும் நினையா ஆன்மாவையும்
உமது வான் வீட்டில் சேர்த்திடவும்
நித்திய இளைப்பாற்றி தா....* - தந்தாய்