Wednesday, December 31, 2014

இயேசு வருகிறார்.. எனை தேடி வருகிறார்.. ( Jesus Birth & Christmas Song in Tamil )




இயேசு வருகிறார்... எனை தேடி வருகிறார்...

ஒளிரும் விண்மீன்கள் ஆர்ப்பரிக்க
மேகக்கூட்டம் மேளதாளங்கள் முழங்க
மின்னல் ஒளியைப்போல்...
என் இயேசு வருகிறார் – நாளும்
வானிலிருந்து எனை தேடி வருகிறார்...

புவிதனில் ஒதுக்கப்பட்ட கற்பாறை நான்
புதர்தனில் தூவப்பட்ட தானியமும் நான்
மாந்தர் நடுவில் என்னை தேர்ந்தெடுக்கிறார்...
பாவ நிழலில் விழாமல் காத்து செல்கிறார்...

ஊதாரி மைந்தன் நான்
உணர்வுகளற்ற பாவி நான்
பாதை மாறிய எனைக்கண்டு பரிதவிக்கிறார்...
பரிவுடனே எனை அணைத்து வழிநடத்துகிறார்...

இன்னல் கண்டு ஒளிபவன் நான்
பிறர் நிழலில் வாழ நினைப்பவன் நான்
மீளமுடியா துயரங்களை துடைக்க வருகிறார்...
வஞ்சமில்லா செம்மை வழியில் அழைத்துசெல்கிறார்... 
--- பிரிட்டோ ராஜ்

Friday, September 26, 2014

நான் நாத்திகனா… இல்லை ஆத்திகனா…! - The LORD is One


நான் நாத்திகனா… இல்லை ஆத்திகனா…!

மனிதர்களின் ஒவ்வொரு அணுவும் அசைவதற்கு ஒரு காரணம் உண்டு. நமது வாழ்வின் ஒவ்வொரு முடிவுகளும், முடிந்தவைகளும் நம்முடைய உதவியின்றியே நடந்து கொண்டுவருகிறது. இன்று ஏழையாக வாழ்பவன் நாளை பணக்காரனாக மாறலாம். இன்று நிம்மதியாய் வாழ்பவன் நாளை நிம்மதியை இழந்து துன்புறலாம்.

இதற்க்கு காரணம் யார்?  நம்மை சுற்றி நடப்பது என்ன?
நம்மை சுற்றி ஏதேனும் சக்தி இருந்து நம்மை ஆட்டிப்படைகின்றதா?

அவர்தான் கடவுளா..! நான் ஏன் கடவுளை மதித்து நடக்கவேண்டும். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. நான் நல்லது செய்தால் சொர்க்கம் செல்வேன் அல்லது தீமை செய்தால் நரகம் செல்வேன் என்று எனக்கு எப்படி தெரியும்.

இந்த வாழும் உலகில் நமக்கு நாமே வரையறுத்த சட்டங்கள் நம்மை இந்த வாழும் உலகில் வழிநடத்தி செல்கின்றன. நன்மை செய்து வாழ்பவன் நிம்மதியோடும், துன்பங்கள் செய்பவர்கள் தண்டிக்கப்பட்டும், சிறைகளிலும் அடைக்கப்படுகிறார்கள். இதில் நடைமுறைகளுக்கு மாறாக நிகழ்வதும் உள்ளன. அவைகள் நமது வாழ்க்கையோடு முடிந்து விடுகின்றன. ஆனால் இந்த நிகழ்வு நான் இறந்த பிறகு நடப்பது உண்டோ..! சொர்க்கத்தை கண்டவர்கள், நரகத்தில் வேதனைப்படுபவர்கள் யாரையும் பார்த்தது உண்டா...! நமக்கு மறுவாழ்வு உண்டா..!

கடவுள் இருப்பது உண்மையென்றால், ஏன் எந்த ஒரு இறைவாக்கினர்களும், இறை தூதர்களும் என் சமூகத்தில் பிறக்கவில்லை. என்னுடைய சமூகம் அடிமைப்பட்டு, துன்பப்பட்டு பாவத்தில் மூழ்கிய பொது, ஏன் எந்த இறை தூதர்களும் எம்மக்களை காப்பாற்றவில்லை.
இஸ்ராயேல் மக்களிடம் அன்பு கொண்ட இறைவன் ஏன் மற்ற இன மக்கள் மீது அன்பு கொள்ளவில்லை. ஆதிகாலத்தில் மற்ற தேசங்களில் மக்களே இல்லையா. அப்படியானால் கடவுளின் பார்வையில் பாவிகளாய் தென்பட்டவர்கள் இஸ்ராயேல் மக்கள் மட்டும் தானா...!

நாங்கள் பல மன்னர் ஆட்சிகளில் மிதிபட்டு, ஆங்கிலேயரிடம் அடிபட்டு; கல், மண், காற்று என எங்களுக்கு உதவியவைகளை வணங்கும்போது, ஏன் கடவுள் எங்கள் முன்தோன்றி எங்களை வழிநடத்த முன்வரவில்லை. மீட்பின் கடவுள் இயேசு கூட மீண்டும்   இஸ்ராயேலில் தானே பிறந்தார். ஏன் மற்ற மனிதர்களின்மேல் இந்த ஓர வஞ்சனை. தன்னைப்போல் பிறரையும் நேசி என கூறும் கடவுள்கள், ஏன் மற்ற மக்களை நேசிக்கவில்லை. இஸ்ராயேலர்களிடம் பல புதுமைகள் செய்த கடவுள் ஏன் எம்மக்களின் துன்பம் துடைக்கவில்லை.
ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பதாலா...

இன்னும் எத்தனையோ சிந்தனைகள், எண்ணங்கள் நம்மிடம் மேலோங்கி காணப்படுகின்றன. ஏனெனில் நாம் மனித பிறவி.
நமக்குள் நாம் ஆத்திகனா இல்லை நாத்திகனா என ஆயிரம் கேள்விகள் தோன்றி மறைந்தாலும், நம்மிடம் அசைக்கமுடியாமல் ஒன்று நிலைபெற்று இருப்பது " நம்பிக்கை ". இதுதான் மனிதனை ஒருமைப்படுத்துவதும் மற்றும் இறைவனை நம்முடன் இணைப்பதும், நாம் பிறருக்காக வாழ பாலமாகவும் அமைகிறது.

நம் இறைவன் நமக்காக தோன்றவில்லை, நம்முடன் வாழவில்லை என எண்ணுபவருக்கும் இறைவன் ஒரு கட்டளையை முன் வைக்கிறார், அதுதான்  "நம்பிக்கை". என்னை கண்டு வணங்குபவனை விட, காணமல் வணங்குபவனே பேறுபெற்றோர். இதுதான் இறைவன் மனிதன் மீது கொண்ட நம்பிக்கை.

நாம் என்றாவது சிந்தித்து உண்டா... இறைவன் எப்படி என்னுள் வந்தார், அவரை எப்படி என் சமூகம் ஏற்று கொண்டது. இந்த மாபெரும் திருச்சபை எப்படி இஸ்ரயேலர் நடுவே பிறந்த இறைவனால் கட்டி எழுப்பப்பட்டது. அதுவே நாம் இறைவன் மீது கொண்ட நம்பிக்கை. அவர்தான் மெய்யான மீட்பர் நம்மை பாவங்களிலிருந்தும், மூடனம்பிக்கைகளிளிருந்தும் மீட்டெடுத்துள்ளார். என உண்மையாக நம்புவதால் தான் இத்தனை பெரிய இறைச்சமூகம் உருவானது.

எனது எண்ணங்கள் செயல்கள் நாத்திகனாய் தோன்றினாலும், இறைமகன் இயேசு என் மனதுக்குள் குடியிருப்பதால் நான் இந்த நாகரீக உலகில் நாத்திகன் போர்வைப்போர்த்திய ஆத்திகனாய் வாழ்ந்து வருகிறேன்.
" கடைசியானோர் முதன்மையாவர்...
முதன்மையானோர் கடைசியாவர்
நாமும் முதன்மையாவோம் இறைவனை நம் வாழ்வில் முழு மனதோடு ஏற்று
ஜோ. பிரிட்டோ ராஜ்,
இராமனாதிச்சென் புதூர்,

Prisma Paints, Bahrain.

வாழ்ந்திட துடிக்கின்றேன் - Live for God



வாழ்ந்திட துடிக்கின்றேன்

எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர் – இன்னும்
எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்
இறுதிவரையிலும் மறந்து விடுவீரோ – என் வாழ்நாளில்
உன் தரிசனம் காணாமல் மறைந்து போவேனோ...!

மனித வாழ்க்கையே பாவங்களில் மூழ்கிபோகிறதோ
மீட்புப்பாதை சாவில் மட்டும் தான் தோன்றுகிறதோ...
நானும் உமது சாயல் தானே....
என் கண்நோக்கி பதில் தரமாட்டீரோ
என் விழிகளுக்கு ஒளியூட்ட மாட்டீரோ...

என் முழு இதயத்தோடு உம்மைப் புகழவில்லையோ – உம்
வியத்தகு செயலை அயலார்க்கும் பறைசாற்றவில்லையோ...
நானும் உமது பிள்ளை தானே...
நீர் என்னுடன் வருகையில் நான் மகிழ்ந்து ஆர்ப்பரித்தேனே
உமது உன்னதப்பெயரை போற்றி பாடினேனே..

எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிப்பெருவேனா
உம் வலதுப்பக்கத்தில் அமரும் தகுதி பெறுவேனா...
நான் நேர்மையில் நிலைத்திருந்து
உம் முகம்கண்டு நிறைவு பெறுவேனா...
ஜோ. பிரிட்டோ ராஜ்,
இராமனாதிச்சென்புதூர்,

Prisma Paints, Bahrain

Sunday, July 20, 2014

நான்தான் இந்தியா ( I AM INDIA )


பணக்காரனும் நான்தான்...
ஏழையும் நான்தான்...
என் வசதிக்கு காரணமும் என் குலம்தான்...
வறுமைக்கு காரணமும் என் குலம்தான்...

படித்தவனும் நான்தான்...
படிக்காதவனும் நான்தான்...
பிழைப்புக்காக பட்டம் ஏந்தி அலைவதும் என் குலம்தான்...
படிப்பைவிற்று அயல்நாட்டில் பிழைப்பு நடுத்துவதும் என் குலம்தான்...

ஆட்சியும் நான்தான்...
அரசியல்வாதியும் நான்தான்...
அடிமைப்படுத்துவதும் என் குலம்தான்...
அடிமையாய் இருப்பதும் என் குலம்தான்...

கற்பழித்ததும் நான்தான்...
கற்பழிக்கப்பட்டதும் நான்தான்...
எனை தண்டிக்க போராடுவதும் என் குலம்தான்...
தண்டனையிலிருந்து தப்பிக்க வழிவகுப்பதும் என் குலம்தான்...

அடிப்பதும் நான்தான்...
அடிவாங்குவதும் நான்தான்...
வேடிக்கை பார்த்ததும் என் குலம்தான்..
வேடிக்கை பார்க்கவைத்ததும் என் குலம்தான்...

கடவுளும் நான்தான்...
கடவுளாய் மதிக்கப்படுபவனும் நான்தான்...
கண்ணீராய் வணங்குவதும் என் குலம்தான்...
கண்ணீரை வரவைத்ததும் என் குலம்தான்...


நான்தான் நான்தான் நான்தான் இந்தியா...

---பிரிட்டோ ராஜ்

Saturday, May 10, 2014

கூடங்குளத்தில் அணு உலைக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ( A verdict against Kudankulam Nuclear Power Plant)




கூடங்குளத்தில் பாதுகாப்பை ஆய்வு செய்ய குழு தேவை இல்லை: அணு உலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு...
.
.
.
.
இதே போபால் விபத்திற்கு என்ன தீர்ப்பை சுப்ரீம்கோர்ட் வழங்கியதோ அதே நிலைமைதான் இனி அனுவுலைக்கும்..

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வுரிமை போனதே என தலையில் அடித்து கொள்கிறார்கள். நாம் ஜெயித்துவிட்டோம் என மற்றொரு பிரிவினர் மார்தட்டிக்கொள்கிறார்கள்.

என்னடா ஜனநாயகம்...

2010ம் ஆண்டிற்கு முன்பு தேவைப்படாத இந்த அணுவுலை இப்பொழுது அனைவரின் தேவையாக எழுந்து நிற்கிறது. அதற்க்கு முன்பு நமக்கு கிடைத்த தடையில்லா மின்சாரம், சில வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்டது. தேவைகள் அதிகரித்துவிட்டது என ஒரு பிரிவினர் கூறினார்கள், ஆனால் அதற்க்கு மூல காரணமான மின்சாரம் முன்பு எப்படி பெற்று கொண்டிருந்தோம்(அணுவுலை இல்லாதபொழுது), ஏன் இப்பொழுது தடை படுகிறது என்பதை மறந்தோம்.

அதன் பிறகு அனைவரும் அணுவுலை மீது கவனம் செலுத்தினார்கள், எங்களுக்கு அணுவுலை வேண்டும், எங்கள் நாடும் குடும்பமும் முன்னேறவேண்டும் எனவே அணுவுலை தேவை என ஆதரித்து பேசினார்கள்.

இன்னும் நாட்கள் இருக்கிறது எங்களது பிணங்களை வைத்து உங்களுக்கு அனுதாப ஓட்டுக்கள் வாங்கித்தருவோம். அப்பொழுது இந்த மனித நல மேம்பாட்டுக்குழுவிற்கு நோபல் பரிசும் கிடைக்கும், அவர்களது அயராத உழைப்பும்(நடிப்பும்) தெரியவரும்.

அப்பொழுதும் இதே சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கும், எவ்வாரென்றல்..
மத்தியஅரசு தனது கடமையை செய்ய தவறிவிட்டது, பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் நிதிவுதவியும், இலங்கையில் குடியுரிமையும் அமைத்து தரப்படும். ஏனெனில் இந்தியா வல்லரசாகிவிட்டது.
நம்புங்கள்...

என்னடா ஜனநாயகம்.. எதுடா சுதந்திரம்...
இன்னும் நாம் அடிமைப்பட்டுத்தான் கிடக்கிறோம், மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு என்ற வார்த்தையை நம்பி..

என் வார்த்தைகள் உண்மை என்றால் பகிருங்கள், நாளை இதுவே சாட்சியாக அமையட்டும்....

---பிரிட்டோ ராஜ்

Monday, April 28, 2014

இந்திய மக்களுக்கென்று ஒரு சமூக வலைதளம் ( A social website for Indian People)



                Facebook எனும் ஒரு வலைதளத்தை நிறுவி, அதில் உலகத்தில் உள்ள அணைத்து மக்களும் தங்கள் இன்பம் மற்றும் துன்பங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்..

அதைப்போல..
இந்திய மக்கள் அனைவரும் (காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) மட்டும் உபயோகபடுத்தும் வண்ணம் நமக்கென்று FaceBook போன்று ஒரு அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தை உருவாக்கமுடியாது. முடியும் என்றால்..

இதனால் ஏற்ப்படும் நன்மைகள்..
  1.        எந்த ஒரு இந்தியனும், எந்த ஒரு மூலையிலிருந்தும் தகவல்களை பரிமாறலாம்
  2.        FB போல் அல்லாமல் (முகம்தெரியாத மற்றும் பழக்கமில்லாத தொடர்புகளை சேர்த்துக்கொள்ள முடியாது), இந்திய மக்கள் அனைவருடன் சேர்ந்து நட்புறவில் இருக்கலாம்.
  3.        இந்தியன் ஒவ்வொருவரின் பெயர் மற்றும் அவர்களை சார்ந்த தகவல்களை பெறமுடியும் (ஆதர் அடையாள அட்டைப்போல)
  4.        ஊடகங்களின் வேலைகள் குறையும்.
  5.        சமூக அவலங்களை மற்றும் அதிகாரிகளின் முறைகேடுகளை உடனுக்குடன் அனைவருக்கும் பகிரலாம் மற்றும் தீர்வு காணலாம்.
  6.        காவல்த்துறை நண்பர்களுக்கும் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் எல்லா தகவல்களும் உடனே சென்றுசேரும்.
  7.        எந்த ஒரு சட்டமும் வாக்கெடுப்பும் மற்றும் அரசியல் சாதனங்களும் எல்லா மக்களுக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படையாக மாறும்.
  8.        கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் அது இந்தியருக்கே கிடைக்கும் வண்ணம் மாறும்.
  9.        பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அச்சுறுத்தல்கள் இதன் மூலம் குறையும், ஏனெனில் எல்லாரும் ஒரே இடத்தில் இருப்பதால் தகவல்கள் அருகில் உள்ளவருக்கு எளிதில் சென்று சேரும்.
  10.    FBல் பொழுது கழிப்பவர்களுக்கு, இது ஒரு சமூக மேம்பாட்டு வலைதளமாய் மாறும்.
  11.    யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது, ஏனெனில் இதில் அணைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு விடும்.
  12.    இந்த வலைதளத்தை இலவச பயன்பாடாக மக்களுக்கு கொடுக்கப்படவேண்டும்.


இது ஒரு மிகப்பெரிய புரட்சி, இது நடந்தால் இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடாய் மலரும்.
இதை அனைவருக்கும் பகிருவோம்.. மறுமலர்ச்சியை ஏற்ப்படுத்துவோம்.

- உங்கள் கருத்துக்களை பகிரவும்.. பிரிட்டோ ராஜ்.

Thursday, April 24, 2014

பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ? ஏஜென்ட்களை நாடி அதிக பணம் மற்றும் நேரத்தை விரயம் செய்யாதீர்கள் ( How to apply the Passport in Tamil Nadu )




பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா
ஏஜென்ட்களை நாடி அதிக பணம் மற்றும் நேரத்தை விரயம் செய்யாதீர்கள்..

அப்படியென்றால் மறக்காமல் இதை படியுங்கள் !!

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில்...

  •  முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்


COPY & PASTE THIS LINK

https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

1. District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்

2. Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

3. Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு
கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)

4. First Name: உங்களது பெயர்

உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து

5. Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

6. Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

7. Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

8. Place of Birth: பிறந்த ஊர்

9. District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

10. Qualification: உங்களது படிப்பு

11. Profession: தொழில்

12. Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

13. Height (cms): உயரம்

14. Present Address: தற்போதைய முகவரி

15. Permanent Address: நிரந்தர முகவரி

16. Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

17. Phone No: தொலைபேசி எண்

18. Mobile No : கைப்பேசி எண்

19. Email Address: மின்னஞ்சல் முகவரி

20. Marital Status: திருமணமான தகவல்

21. Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்

22. Father's Name: தந்தை பெயர்

23. Mother's Name: தாயார் பெயர்

24. தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

25. பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

26. உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

1. Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

2. Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

3. Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

4. File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

5. Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[ ] கண்டிப்பாக எழுதவும் [ ] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

    அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும்.

அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

--- முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

· ரேசன் கார்டு

· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· வாக்காளர் அடையாள அட்டை

· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

· துணைவின் பாஸ்போர்ட்

· பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்

· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்

· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

--- வேறு சான்றிதழ்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
 மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.

- மறக்காமல் பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

- அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.

- குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும்.

- நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும், நேரத்தையும் நன்கு குறித்து கொண்டுஅன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள்அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா...

நாள் மட்டும்தான் உண்மை,
முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்...
கால் கடுக்க நிற்க வேண்டும்ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். 
பிற ஏஜென்ட்களை நாடி அதிக பணம் மற்றும் நேரத்தை விரயம் செய்யாதீர்கள்..