Wednesday, March 20, 2019

ஓய்ந்திடு அலையே (Rest of Sea Waves)





ஓய்ந்திடு அலையே...!

இயந்திர வாழ்க்கையிது
ஓய்வுக்கு ஒருநாளெடுத்து சக்கரம்போல் சுழல்கிறது
இதற்க்காயா பிறந்தாய் என ஓலமிட்டே
காலமும் ஓடுகிறது..!

உணவு கொடுத்து திறம்பட வளர்த்து வெட்டப்படும்
கோழி, ஆடு, மாடு போல் தான் மனிதனும்...
மானிடனாய் பிறக்க மாதவம் செய்யவேண்டும்
இன்று மானிடனாய் வாழ மாதாமாதம்
கைகட்டி வேலை செய்யவேண்டும்..!

அதிகம் படித்தலே ஆகச் சிறந்தது
கடின உழைப்பே உயர்வின் பலன்
கார்ப்பரேட் ஆகிப்போன உலகத்தில் – இது
யாருக்காக எழுதிவைத்த பொன்மொழிகள்..!

அள்ளித்தந்த இயற்கையை அடுப்புக்கரி ஆக்கிவிட்டு
அடுப்புக்கரி தயாரிப்பதை பாடமாக படிக்கிறோம்..
மனித பேராசையில் நிலங்களை வளைத்துப்போட்டு
மனிதனையே அங்கு உரமாக மாற்றுகிறோம்..!

நாட்டினை காக்க ஒரு கூட்டம்
இன மத மொழியைக் காக்க ஒருகூட்டம்...
அன்றாட உணவுக்கு அனுதினம் ஓடும் ஒருகூட்டம்
அடுத்தவேளை உணவின்றி கையேந்தும் மறுகூட்டம்
என்ன வாழ்க்கை இது என கேட்குமுன்
எதற்கிந்த மனித பிறப்பு என கேட்க தோனுகிறது..!

இயற்கையின் பெருக்கம் அழிவை தருவதில்லை
செயற்கையின் பெருக்கம் நிறைவை தருவதில்லை
மனித பெருக்கம் நிம்மதியாய் வாழ விடுவதில்லை
ஒருநாள் வரும் – அன்று
ஊணும் அழிந்து
உலகமும் அழிந்து
கடைசி மனிதனின் சத்தம் கேட்க்கும்போதாவது
ஓய்ந்திடு அலையே
ஒருவருக்கும் அடிமையாய் நிம்மதியின்றி வாழாமல்..!
.
.
- ஜோ. பிரிட்டோ கிளாரா

No comments:

Post a Comment

Do U Like This...