Thursday, March 14, 2019

முகநூலும் இருமுகங்களும் (Facebook Faces)







முகநூலும் இருமுகங்களும்..!

ஒருமுகம்...

அது நல்லதை பாராட்டும் 
அது நட்பாய் பழகும் 
அது மறவாமல் வாழ்த்துக்கள் கூறும் 
அது துன்பத்தில் ஆறுதல் படுத்தும் 
அது இனிய நிகழ்வுகளை விளம்பரப்படுத்தும் 
அது பொதுநிலையை ஊக்குவிக்கும் 
அது அனைவரையும் ஒன்றுபடுத்தும் 
அது இடர்களில் கைகொடுக்கும் 
அது நல்லது செய்ய தூண்டும் 
அது வாழ்வுக்கு வழிகாட்டும்...

மறுமுகம்...

அது தன்னிலை மறக்க வைக்கும் 
அது கோபத்தை வெளிபடுத்தும் 
அது காலமறிந்து பிரிவினை பேசும் 
அது கலவரத்தை தூண்டும் 
அது நஞ்சை விதைக்கும் 
அது கெட்டதை பரப்பும் 
அது ஒற்றுமையைக் கெடுக்கும் 
அது தீயவனவற்றை பழகச் செய்யும் 
அது ஆபாசத்தை ஊக்குவிக்கும் 
அது தவறானபாதைக்கு அழைக்கும் 
அது நிம்மதியை குலைக்கும் 
அது நம்மை மறைத்து வைக்கும் 
அது நம்மை தனிமைபடுத்தும் 
அது நம்மை ஆக்கிரமிக்க பார்க்கும்...

எதை நீ அணிந்து 
முகநூலில் பயணிக்கிறாயோ – அதன்படி 
நம் வாழ்வும் செயலும் அமையும்... 
இங்கே 
இரட்டை முகமூடி அணிபவர்களும் உண்டு 
அதை உணர்ந்து பழகினால் நன்று... 
முகநூலுக்கு அடிமையாகாதே - யாரும்
உன்னை அடிமைபடுத்தவும் விடாதே... 
தெரியாத முகத்தின் பிடியில் சிக்காதே 
வாழ்க்கை உன் கையில் என்பதையும் மறக்காதே...! 
. 
.  
ஜோ. பிரிட்டோ ராஜ் கிளாரா

No comments:

Post a Comment

Do U Like This...