Monday, April 1, 2019

Miss you Sister - Helen Anastus


அன்பு தங்கையே
எங்கள் அழுகுரல் கேட்கின்றதா...
ஆயிரம் கைகள் ஆறுதலாயிருக்க
ஆண்டவனைத் தேடி சென்றாயா...
என்று உன் குரலை கேட்டபேன் - இனி
என்று உன் முகத்தை பார்ப்பேன்...
குடிசையில் வாழ்ந்த போதும்
குதுகலமாய் இருந்தோமே - இன்று
தனி குடும்பமாய் ஆன பின்பு
கூடிவாழ வழியின்று பிரிந்து சென்றாயா...
இறைவா ஏன் எடுத்துகொண்டாய் - ஏன்
எங்கள் நிம்மதியை பறித்துவிட்டாய்...
மறுஜென்மம் வேண்டாம்
இப்பிறவியில் என் தங்கையை கொடு...
நிதம் கண்முன் நின்றவளுக்கு
நினைவு நாளை எண்ண வைக்காதே...
மன்றாடி உனைகேட்கிறேன் - எங்கள்
செல்வத்திற்கு மறுவாழ்வு பிச்சைகொடு...
எல்லாம் முடிந்தபின்பு
ஏன் இந்த கூப்பாடு...
இறக்கும் தருவாயில் 
அவள் அனுபவித்த வலியை நினைக்கையில் 
மனம் அமைதியடைய மறுக்கிறது...
நேற்று பார்த்த அவள்
இன்று இல்லை எனும்போது...
நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது...
ஐந்து நிமிடம் ஓய்வின்றி ஓடியாடிதிரிபவள்
ஆறடி குழிக்குள் எப்படி அமைதியாயிருப்பாள்
இறந்தாலும் பரவாயில்லை - நீ
எங்களுடன் இருந்துவிடு...
பிரிந்து மட்டும் சென்றுடாதே
எங்களை உயிரோடு மட்கவைத்துவிடாதே...
கடல் தாண்டி வந்த அனுதாப அலை
கடைசி நிமிடத்திலாவது நீ விழித்திடமாட்டாயா
இறைவா ஆணையிடு
என் தங்கையை திருப்பிகொடு..!

Wednesday, March 20, 2019

ஓய்ந்திடு அலையே (Rest of Sea Waves)





ஓய்ந்திடு அலையே...!

இயந்திர வாழ்க்கையிது
ஓய்வுக்கு ஒருநாளெடுத்து சக்கரம்போல் சுழல்கிறது
இதற்க்காயா பிறந்தாய் என ஓலமிட்டே
காலமும் ஓடுகிறது..!

உணவு கொடுத்து திறம்பட வளர்த்து வெட்டப்படும்
கோழி, ஆடு, மாடு போல் தான் மனிதனும்...
மானிடனாய் பிறக்க மாதவம் செய்யவேண்டும்
இன்று மானிடனாய் வாழ மாதாமாதம்
கைகட்டி வேலை செய்யவேண்டும்..!

அதிகம் படித்தலே ஆகச் சிறந்தது
கடின உழைப்பே உயர்வின் பலன்
கார்ப்பரேட் ஆகிப்போன உலகத்தில் – இது
யாருக்காக எழுதிவைத்த பொன்மொழிகள்..!

அள்ளித்தந்த இயற்கையை அடுப்புக்கரி ஆக்கிவிட்டு
அடுப்புக்கரி தயாரிப்பதை பாடமாக படிக்கிறோம்..
மனித பேராசையில் நிலங்களை வளைத்துப்போட்டு
மனிதனையே அங்கு உரமாக மாற்றுகிறோம்..!

நாட்டினை காக்க ஒரு கூட்டம்
இன மத மொழியைக் காக்க ஒருகூட்டம்...
அன்றாட உணவுக்கு அனுதினம் ஓடும் ஒருகூட்டம்
அடுத்தவேளை உணவின்றி கையேந்தும் மறுகூட்டம்
என்ன வாழ்க்கை இது என கேட்குமுன்
எதற்கிந்த மனித பிறப்பு என கேட்க தோனுகிறது..!

இயற்கையின் பெருக்கம் அழிவை தருவதில்லை
செயற்கையின் பெருக்கம் நிறைவை தருவதில்லை
மனித பெருக்கம் நிம்மதியாய் வாழ விடுவதில்லை
ஒருநாள் வரும் – அன்று
ஊணும் அழிந்து
உலகமும் அழிந்து
கடைசி மனிதனின் சத்தம் கேட்க்கும்போதாவது
ஓய்ந்திடு அலையே
ஒருவருக்கும் அடிமையாய் நிம்மதியின்றி வாழாமல்..!
.
.
- ஜோ. பிரிட்டோ கிளாரா

Thursday, March 14, 2019

முகநூலும் இருமுகங்களும் (Facebook Faces)







முகநூலும் இருமுகங்களும்..!

ஒருமுகம்...

அது நல்லதை பாராட்டும் 
அது நட்பாய் பழகும் 
அது மறவாமல் வாழ்த்துக்கள் கூறும் 
அது துன்பத்தில் ஆறுதல் படுத்தும் 
அது இனிய நிகழ்வுகளை விளம்பரப்படுத்தும் 
அது பொதுநிலையை ஊக்குவிக்கும் 
அது அனைவரையும் ஒன்றுபடுத்தும் 
அது இடர்களில் கைகொடுக்கும் 
அது நல்லது செய்ய தூண்டும் 
அது வாழ்வுக்கு வழிகாட்டும்...

மறுமுகம்...

அது தன்னிலை மறக்க வைக்கும் 
அது கோபத்தை வெளிபடுத்தும் 
அது காலமறிந்து பிரிவினை பேசும் 
அது கலவரத்தை தூண்டும் 
அது நஞ்சை விதைக்கும் 
அது கெட்டதை பரப்பும் 
அது ஒற்றுமையைக் கெடுக்கும் 
அது தீயவனவற்றை பழகச் செய்யும் 
அது ஆபாசத்தை ஊக்குவிக்கும் 
அது தவறானபாதைக்கு அழைக்கும் 
அது நிம்மதியை குலைக்கும் 
அது நம்மை மறைத்து வைக்கும் 
அது நம்மை தனிமைபடுத்தும் 
அது நம்மை ஆக்கிரமிக்க பார்க்கும்...

எதை நீ அணிந்து 
முகநூலில் பயணிக்கிறாயோ – அதன்படி 
நம் வாழ்வும் செயலும் அமையும்... 
இங்கே 
இரட்டை முகமூடி அணிபவர்களும் உண்டு 
அதை உணர்ந்து பழகினால் நன்று... 
முகநூலுக்கு அடிமையாகாதே - யாரும்
உன்னை அடிமைபடுத்தவும் விடாதே... 
தெரியாத முகத்தின் பிடியில் சிக்காதே 
வாழ்க்கை உன் கையில் என்பதையும் மறக்காதே...! 
. 
.  
ஜோ. பிரிட்டோ ராஜ் கிளாரா

Monday, February 25, 2019

அன்பின் தேவதை - Aroha Clabrin


அன்பின் தேவதை
அகிலம் காண வரவுள்ளாள்...
சூரியனுக்கு தூது சொல்லுங்க
சுட்டெரிக்கும் வெயிலை குறைக்க சொல்லி...
சந்திரனுக்கு தூது சொல்லுங்க
இதமா நாளும் இருக்க சொல்லி...!

இறைவனின் இனிய படைப்பு
இந்த மண்ணை காண வருகிறாள் - அவள்
புன்னகையை பார்க்க கோடி கண்கள் வேண்டும்
சினுங்கும் ஓசை கேட்க கோடி காதுகள் வேண்டும்
பூமியில் தன் பாதம் பதிக்க
இது புண்ணியம் செய்ய வேண்டும்...
இந்த உலகுக்கு நல்சேதி சொல்வாள் அதைக்கேட்கத்தான்
நமக்கு சில மாதங்கள் வேண்டும்...
குழந்தையாய் மகள் பிறக்க 
நல்ல பாக்கியமும் செய்ய வேண்டும்..!

கால் பருவ படிப்பு காத்திருக்கு
அரை பருவ உறவு காத்திருக்கு
முழு பருவ உழைப்பு காத்திருக்கு
இதையெல்லாம் தெரிந்துகொண்டு வருவாளா
தெரிய வைத்தால் இப்பூமிக்கே வருவாளா...!

முதல் பார்வையில்
இப்பூமியைக் கண்டு ரசிப்பாளா
மனிதர்களை பார்த்து சிரிப்பாளா – இல்லை
இதெல்லாம் வேண்டாமென அழுவாளா..!
மனித கோட்பாடுகளை அறிவாளா
மனித சட்டதிட்டங்களை மதிப்பாளா
ஆசைகளின் பிடியில் சிக்குவாளா
தேவைகளின் பிடியில் தவிப்பாளா

நான் எவ்வாறு கோபப்படுவேன்
அவள் தவறுகள் செய்யும்போது... 
நான் எவ்வாறு சந்தோசப்படுவேன்
அவள் கொஞ்சி விளையாடும்போது...
உலகை சுற்றி பார்க்க ஆசையில்லை
சந்திரனுக்கு போக வசதியுமில்லை – ஆனால்
உலகம் பெரியது என கற்றுகொடுப்பேன் - இதைத்தான் 
நீ கடைபிடிக்கவேண்டுமென திணிக்காமல் இருப்பேன்...
தாழ்த்தப்பட்டவர்கள் என யாரையும் கூறச்சொல்லமாட்டேன்
சாதிபேரை சொல்லி பிறரை சங்கடபடுத்த விடமாட்டேன்
மதவாதிகள் என மனிதம் மாறச்செய்யமாட்டேன்
அயலானுடன் எந்நாளும் நட்பாய் பழகச்சொல்வேன்...!

கையை இறுக பிடிக்க சொல்வேன்
கயமுயா என கத்தாமல் வரசொல்வேன் - அப்பாவின்
கழுத்தில் உப்புமூட்டை ஏறச்சொல்வேன்
அம்மாவை மட்டும் (செல்லமா) கடிக்க சொல்வேன்
சாலையை வேகமாக கடக்க சொல்வேன்
பெரியவர்களிடம் பணிவாக ஆசிர்வாதம் வாங்கசொல்வேன்
ஆசிரியரை மதித்து நடக்கச் சொல்வேன்
அன்போடு பிறரிடம் பழகச் சொல்வேன்...!

கண்டதை வாங்கி சாப்பிடமாட்டோம்
கடனைப் பற்றி யோசிக்கமாட்டோம்
கடைவீதியில் சண்டை போடமாட்டோம்
இதையெல்லாம் செய்யாமலிருக்கவும் தயங்கமாட்டோம்...!

தாயும் ஒரு குழந்தைதான்
சேயும் ஒரு குழந்தைதான்
இருவரின் சேட்டைக்கு பலிகடாவாகுவேனோ...
பத்து மாதங்கள் ஓடிவிட்டது...
காத்திருப்புக்கு பலனும் கிடைக்கப்போகிறது...
தேவதை மண்ணில் வரும் நேரம்
இப்பூமியே அழகாய் மாறப்போகிறது...
இறைவன் தூவிய அன்பின் விதை 
மண்ணில் காலூன்ற போகிறது..!
.
.
-ஜோ. பிரிட்டோ ராஜ் கிளாரா

Tuesday, January 15, 2019

Happy Pongal - 2019 (தமிழர் திருநாள்)

உழவையும் உணவையும்
உலகுக்கு படைத்த நாள்🌾..!
முத்தமிழை மூவுலகோர்க்கு தந்த
மூத்தகுடி மக்களின் நாள்🌾..!
அன்பையும் அரணையும்
அறுவடை செய்த நாள்🌾..!
வரியவர்களுக்கு வாரிகொடுத்து
வந்தவனையும் வாழவைத்த நாள்🌾..!
மனிதமும் மண்ணுயிர்களும்
மகிழ்வில் பொங்கிய பொன்நாள்🌾..!
தலை நிமிர்ந்து தரணியே போற்றும்
தமிழர்களின் நந்நாள் - இன்று
தமிழர் திருநாள்🌞🌾..!
.
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
-ஜோ. பிரிட்டோ கிளாரா

Sunday, January 13, 2019

தீதின் இனி மைதீரா (பைந்தமிழ் 2019)


தீதின் இனி மைதீரா
முத லேற்றபதி னோடே
பிற தாழினை மடிபணியா
நுதனூற் இல்விதம் சேர்
பேதமி ழந்த நனினுடைய
புனைப் போரிலநா நின்
வினை வெய்னேற்றி தனி
சிதலமி னன்றி உடையான்
ஒற்றில் வினாபேடி நன்
கனகள் இனதே நலன்
எள்ளு உரை ஏட்டினை
மா நிதம் தேடான்
விந்த வகிதமே கானி
பிறளா விதி நல் மேவி
எந்திரள் ஆக நீற்றி
இறை வாழ் புவி தனிபோல்
மேன்மிதம் நன்னில் செய்யீர்..!
.
- ஜோ. பிரிட்டோ கிளாரா