Thursday, November 1, 2018

Justice for Rajalakshmi








நம்மில் எத்தனை கடவுள்கள் இருக்கின்றோம்..!

சிறுமியின் கதறல்களும்
தாயின் மன்றாட்டுக்களும் - என்
தேசத்தை நிம்மதியாய் தூங்கவிடுமோ...
இதுவும் ஒரு செய்திதான் என
அலட்சியமாக கடந்துவிடுமோ..!
சாதி எனும் பேரில்
சாக்கடை பூக்களாகிவிட்டோம்...
வெளியில் மனம் வீச
உள்ளே நாற்றமடித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்..!
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவை
இச்சாதிய பிரிவினை மாற..!
பெண் பிள்ளைகள்
இச்சமூகத்தின் போதைப் பொருள்களா..
வலுவின்மையை பயன்படுத்தி
வஞ்சிக்கிறது இவ்வுலகம்..!
தமிழ் நாட்டில் இத்தனை அண்ணன்கள் இருந்தும்
அவள் குரலுக்கு செவிகொடுக்காமல்
சிறுமியும் இறந்துவிட்டாள்
அவள் கனவுகளும் புதைந்துவிட்டது..!
பதில் சொல் சமூகமே
இன்னும் எத்தனை உயிர்கள்வேண்டும்
இச்சாதியை ஒழிக்க..
எம் பெண்களின் மானம் காக்க..!
ராஜலட்சுமி கடவுளிடம் முறையிட்டிருப்பாள்
இப்பாவியை மன்னியுங்கள் என்றும்.. – இனி என்போல்
இவ்வேதனையை யாரும் படக்கூடாதென்றும்..!
நம்மில் எத்தனை கடவுள் இருக்கிறோம்
சாதி, இன பாகுபாடு கடந்து - அவளை
நம் சகோதரியாய், பிள்ளையாய் அரவணைக்க..!
#JusticeforRajalakshmi #Rajalakshmi

-ஜோ. பிரிட்டோ ராஜ்
(அண்ணன்களில் ஒருவனாக)

No comments:

Post a Comment

Do U Like This...