Tuesday, June 23, 2015

எனது இதயம் தொடர்ந்து செல்லும் - தமிழ் கவிதை



ஒவ்வொரு இரவும் எனது கனவுகளில்
உன்னை பார்க்கிறேன்.. உன்னை உணர்கிறேன்...

தூரம் அதிகம் இருப்பினும்  - இருவருக்கும் இடையிலான இடைவெளி அதிகம் இருப்பினும்
நீ என்னுடன் இருப்பதை நான் உணர்கிறேன்...

அருகிலோ, தூரத்திலோ, நீ எங்கு இருந்தாலும்
எனது இதயம் உன்னைத் தொடர்ந்து செல்வதாக
நான் நம்புகிறேன்
மீண்டும் ஒரு முறை எனது
இதயக் கதவைத் திறந்து பார்
எனது இதயத்தில் நீ இருப்பாய்
எனது இதயம் தொடர்ந்து செல்லும்...

காதல் ஒரு முறைதான் நம்மைத் தொட்டுச் சென்றது ஆனால் அது காலம் முழுவதும் நம் கூட வரும் எப்போதும் நம்மை விட்டு அது அகலாது
நாம் முடிந்து போனாலும்...!

நான் உன்னைக் காதலித்தபோது
காதலையும் காதலித்தேன்
வாழ்க்கை முழுவதும் எப்போதும்
நாம் சேர்ந்தே இருப்போம்...

அருகிலோ, தூரத்திலோ, நீ எங்கு இருந்தாலும்
எனது இதயம் உன்னைத் தொடர்ந்து செல்வதாக
நான் நம்புகிறேன்...
மீண்டும் ஒரு முறை எனது
இதயக் கதவைத் திறந்து பார்
எனது இதயத்தில் நீ இருப்பாய்
எனது இதயம் தொடர்ந்து செல்லும்...

நீ என் அருகில் இருக்கிறாய்..
எனக்கு எந்தப் பயமும் இல்லை
எனது இதயம் தொடர்ந்து செல்லும்..

நான் அறிவேன் நாம் இருவரும் சேர்ந்திருப்போம்.. இப்படியே என் இதயத்தில் நீ பத்திரமாய்
எனது இதயம் தொடர்ந்து செல்லும்..
தொடர்ந்து செல்லும்...!

No comments:

Post a Comment

Do U Like This...