Tuesday, June 23, 2015

எனது இதயம் தொடர்ந்து செல்லும் - தமிழ் கவிதை



ஒவ்வொரு இரவும் எனது கனவுகளில்
உன்னை பார்க்கிறேன்.. உன்னை உணர்கிறேன்...

தூரம் அதிகம் இருப்பினும்  - இருவருக்கும் இடையிலான இடைவெளி அதிகம் இருப்பினும்
நீ என்னுடன் இருப்பதை நான் உணர்கிறேன்...

அருகிலோ, தூரத்திலோ, நீ எங்கு இருந்தாலும்
எனது இதயம் உன்னைத் தொடர்ந்து செல்வதாக
நான் நம்புகிறேன்
மீண்டும் ஒரு முறை எனது
இதயக் கதவைத் திறந்து பார்
எனது இதயத்தில் நீ இருப்பாய்
எனது இதயம் தொடர்ந்து செல்லும்...

காதல் ஒரு முறைதான் நம்மைத் தொட்டுச் சென்றது ஆனால் அது காலம் முழுவதும் நம் கூட வரும் எப்போதும் நம்மை விட்டு அது அகலாது
நாம் முடிந்து போனாலும்...!

நான் உன்னைக் காதலித்தபோது
காதலையும் காதலித்தேன்
வாழ்க்கை முழுவதும் எப்போதும்
நாம் சேர்ந்தே இருப்போம்...

அருகிலோ, தூரத்திலோ, நீ எங்கு இருந்தாலும்
எனது இதயம் உன்னைத் தொடர்ந்து செல்வதாக
நான் நம்புகிறேன்...
மீண்டும் ஒரு முறை எனது
இதயக் கதவைத் திறந்து பார்
எனது இதயத்தில் நீ இருப்பாய்
எனது இதயம் தொடர்ந்து செல்லும்...

நீ என் அருகில் இருக்கிறாய்..
எனக்கு எந்தப் பயமும் இல்லை
எனது இதயம் தொடர்ந்து செல்லும்..

நான் அறிவேன் நாம் இருவரும் சேர்ந்திருப்போம்.. இப்படியே என் இதயத்தில் நீ பத்திரமாய்
எனது இதயம் தொடர்ந்து செல்லும்..
தொடர்ந்து செல்லும்...!

Monday, June 15, 2015

விரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா! - Yoga Mudra


பத்மாசனத்தில் அமர்வது போல அதே நிலையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்பு இரண்டு கைகளையும் முதுகுப்புறமாக பின்புறம் கொண்டு வந்து கையின் மணிக்கட்டு பகுதியை இடது கையால் (இறுகப் பிடிக்காமல்) லேசாகப் பற்றிக் கொண்டே மெதுவாக முன்பக்கமாக குனிய வேண்டும்.

நன்கு குனிந்து, தலையின் உச்சி தரையைத் தொடும் நிலைக்கு வர வேண்டும். ஆரம்பத்தில் தரையை தொட முடியாவிட்டால் சிரமப்பட வேண்டாம். முரட்டுத்தனம் வேண்டாம். நாளடைவில் சரியாகி விடும். தரைதொட்ட அந்த நிலையில் சற்றே இழுத்து மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே நிமிர்ந்து மீண்டும் பத்மாசன நிலைக்கு வந்து (பிணைக்கப்பட்ட கைகளை ஒருபோதும் விலக்கக் கூடாது) மெதுவாகப் பின்னர் மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்பு சொன்னது போல தரையை நோக்கி குனிய வேண்டும். இவ்வாறு மூன்று தடவைகள் செய்ய வேண்டும். அதற்கு ஒரு நிமிட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நிமிர்ந்து வரும்போது மூச்சை நன்றாக உள்ளே இழுப்பதும், மீண்டும் குனிந்து கொண்டே வருகையில் தாரளமாய் மூச்சை வெளியே விடுவதும் மிக மிக அவசியம். அதுவே நுரையீரல் நன்கு விரியக் காரணமாகி, வலிமை கொடுக்கும்.

பலன்கள்:

ஜீரண உறுப்புகள் பலமடைகின்றன. அதனால் அவற்றின் இயக்கங்கள் அனைத்தும் வேகமாக நடை பெறுகின்றன.

குடலின் இயக்கம் சீராகிறது.

வயிற்று வலியும், வயிற்றுப் போக்கும் ஓடிவிடும்.

இந்த ஆசனம் நீடித்த மலச்சிக்கல் நோய் உள்ளவர் களை விரைவில் குணப்படுத்தி விடும்.

இடுப்பும், வயிற்றுப் பாகமும் அழகான அமைப்பை பெற்றிடும்.

நுரையீரல் நோயே வராது.

முக்கியமாக ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதம்.