Wednesday, February 9, 2022

Tamil SYNOD Adsumus Prayer - 2021 - 2023 | கூட்டொருங்கியக்கத் திருஅவைக்காக உலக ஆயர்கள் மாமன்ற இறைவேண்டல் செபம்

கூட்டொருங்கியக்கத் திருஅவைக்காக

ஒன்றிப்பு | பங்கேற்பு | நற்செய்தி அறிவிப்பு

உலக ஆயர்கள் மாமன்ற இறைவேண்டல் செபம்!

தூய ஆவியாரே!

உமது திருப்பெயரில் கூடியுள்ள நாங்கள்

இதோ உம் திருமுன் நிற்கின்றோம்!

நீர் ஒருவர் மட்டுமே எங்களை வழிநடத்தக்கூடியவர். எம் இதயங்களை நீர் வாழும் இல்லங்களாக மாற்றும். நாங்கள் எவ்வழியில் பயணிக்க வேண்டும் என்பதையும், அவ்வழியில், எவ்வாறு தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதையும் எங்களுக்குக் கற்றுத்தாரும்.

நாங்கள் பலவீனர்கள், குற்றமுள்ளவர்கள், ஒழுங்கின்மையை ஏற்படுத்தாதவாறு எங்களைக் காத்தருளும். எங்கள் அறியாமையால் தவறான வழியில் செல்லாதவாறும், பாகுபாடுகள் எங்கள் செயல்களை மேற்கொள்ளாதவாறும் தொடர்ந்து காத்தருளும்

உம்மிலே எம் ஒற்றுமையைக் கண்டு, உண்மையானதும், சரியானதுமான பாதையிலிருந்து விலகாமல், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிலைவாழ்வை நோக்கிப் பயணிப்போமாக.

இந்த எம் மன்றாட்டுக்களையெல்லாம், தந்தையாம் இறைவனோடும், திருமகனாம் இயேசுவோடும் என்றென்றும் ஒன்றிணைந்து, எந்நாளும் எவ்விடத்திலும் செயலாற்றும் உம்மை மன்றாடுகின்றோம். - ஆமென்