Thursday, October 7, 2021

Tamil Rosary in New Format - மாதாவின் புகழ்ச்சி செபமாலை

 

அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்முடனே, பெண்களுள் ஆசி பெற்றவரே, கடவுளின் அருளை கண்டடைந்தீரே, உம்முடைய திருவயிற்றின் கனியும், தூயவரும், முடிவில்லா ஆட்சி செலுத்துபவரும், உன்னத கடவுளின் மகனுமாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.

ஆண்டவரே, எனது உள்ளம் உம்மைப் போற்றிப் பெருமைப்படுத்தும், என் வாழ்நாளெல்லாம் உமக்கு அஞ்சி நடந்து, நீர் குறித்தவை எமக்கு நிறைவேறும் என நம்பி, தாழ்நிலையில் உம்முன் நிற்கும் எம்மை என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொள்ளும். நானோ உமது அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். ஆமென்.