Monday, December 31, 2018

இறைவனுக்கு ஒரு புத்தாண்டு மடல் (A New Year Letter to GOD 2019)


இறைவனுக்கு ஒரு மடல், புத்தாண்டு படி வேண்டி..!

எத்தனை புத்தாண்டுகள் வேண்டும்
எம்மக்கள் விடியல் காண இறைவா...
ஒவ்வொன்றாய் அடுக்குகிறேன்
உம்முன் தலைவா...!

ஒருவரையொருவர் மதிக்கும் மாண்பு தருவாயா
ஏழைகளுக்கு உதவும் கரங்கள் அருள்வாயா
பசி பஞ்சம் நாட்டைவிட்டு விலகச்செய்வாயா...
உழைப்பை சுரண்டா முதலாளி கொடுப்பாயா
விளைச்சலுக்கு உரித்தான ஊதியம் தருவாயா...
தொழிலாளிகள் கடன் சுமை குறையசெய்வாயா
நோயற்ற மனிதர்களாய்வாழ வழிசெய்வாயா...
அமைதியான குடும்பங்கள் அமைய செய்வாயா
தன்னிறைவுகாணும் செல்வம் கிடைக்க செய்வாயா...
மதங்களை வெறுக்கா மனநிலை கொடுப்பாயா
ஜாதிகளை ஒதுக்காத சகோதரத்துவம் கொடுப்பாயா...
பெண்ணியம் காக்கும் ஆண்மை அருள்வாயா
ஆணியம் வளர்க்கும் பெண்மை கொடுப்பாயா...
குடி இல்லா குடிமக்களாய் மாற்றித்தருவாயா
குடிசையில்லா வீடுகள் கட்டித்தருவாயா...
பேராசையில்லா மனிதனாய் வாழச்செய்வாயா
தவறான உறவுகளைவிட்டு விலகச்செய்வாயா...
பருவம் ஏமாற்றா காலநிலை அமைத்து தருவாயா
அழிவைதரும் இயற்கை சீற்றங்கள் அகற்றிவிடுவாயா...
சுரண்டல் இல்லா சமுதாயம் கொடுப்பாயா
நாட்டிற்கு நேர்மையான தலைவர்களை கொடுப்பாயா...
வளர்ச்சியில் முக்கியத்துவம் தரும் கட்சிகள் கொடுப்பாயா
வாழ்வாதாரத்தை அழிக்கா திட்டங்களை செயல்படுத்துவாயா...
இதோ எங்கள்...
தேவைகளைத்தான் உம்முன் அடுக்குகின்றோம் இறைவா...
இங்கு தேவைகளின்றி வாழ்க்கையில்லை தலைவா...
அன்பு வேண்டும்... அமைதி வேண்டும்...
வாழ்வும் வேண்டும்... வழியும் வேண்டும்...
வசதியும் வேண்டும்... வளமும் வேண்டும்...
இவைகளை பேண நல்ல மனிதம் வேண்டும்...
அருள்வாயா... – எம்மை
புதுபிறப்புகளாக மாற்றுவாயா...!
.
.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
.
பதில் தருவாய் என எதிர்பார்ப்புடன்
-      - ஜோ. பிரிட்டோ கிளாரா